Return to BahaiPrayers.net
Facebook
மன்னித்தருளும் கடவுளே! இவ்வூழியர்கள் உமது இராஜ்யத்தின்பால் திரும்பி, உமது கிருபையையும் அருட்கொடையையும் நாடிடுகின்றனர். கடவுளே! அவர்களின் இதயங்களை நன்மையானதாகவும், தூய்மை மிக்கதாகவும் ஆக்கிடுவீராக; அதனால், அவர்கள் உமது அன்புக்குத் தகுதியுடையவர்களாக ஆகிடக்கூடும். அவர்களின் ஆவிகளைத் தூய்மைப்படுத்திப் புனிதப்- படுத்துவீராக; அதனால், மெய்ம்மைச் சூரியனின் ஒளி அவர்கள் மீது பிரகாசிக்கக் கூடும். அவர்களின் கண்களைத் தூய்மைப்படுத்திப் புனிதப்- படுத்துவீராக, அதனால், அவர்கள் உமது ஒளியைக் கண்ணுறக்கூடும். அவர்களின் செவிகளைத் தூய்மைப்படுத்திப் புனிதப்படுத்துவீராக; அதனால், அவர்கள் உமது இராஜ்யத்தின் அழைப்புக் குரலைச் செவிமடுக்கக் கூடும்.
பிரபுவே, மெய்யாகவே, நாங்கள் வலுவற்றவர்கள், ஆனால், நீரோ வலிமைமிக்கவர். மெய்யாகவே, நாங்கள் ஏழைகள்; ஆனால் நீரோ செல்வந்தர். நாங்கள் தேடுபவர்கள்; ஆனால், நீரோ தேடப்படுபவர். பிரபுவே, எங்கள் மீது இரக்கங்காட்டி எங்களை மன்னிப்பீராக; எங்களுக்குத் திறனையும், உணரும் தன்மையையும் வழங்கிடுவீராக; அதனால், நாங்கள் உமது தயைகளுக்குத் தகுதியுடையவர்களாக ஆகிடவும், உமது இராஜ்யத்தின்பால் ஈர்க்கப்படவும் கூடும்; வாழ்வெனும் நீரை ஆழப் பருகிடவும் கூடும்; உமது அன்பெனும் தீயால் மூட்டப்படவுங் கூடும்; இந்த ஒளிமிக்க நூற்றாண்டில் பரிசுத்த ஆவியின் மூச்சுக்கள் வாயிலாக மீண்டும் உயிர்பெறவுங் கூடும்.
கடவுளே, என் கடவுளே! உமது அன்புக் கருணை எனும் பார்வைகளை இந்தக் கூட்டத்தின் மீது செலுத்துவீராக. ஒவ்வொருவரையும் உமது காவலிலும், உமது பாதுகாப்புக்குள்ளும் வைத்திடுவீராக. உமது விண்ணுலக ஆசிகளை இந்த ஆன்மாக்களுக்காகக் கீழே அனுப்பிடுவீராக. உமது கருணை எனும் சமுத்திரத்திற்குள் அவர்களை மூழ்கச் செய்து, பரிசுத்த ஆவியின் சுவாசங்கள் வாயிலாக அவர்களை உயிர்பெறச் செய்வீராக.
பிரபுவே! உமது கிருபைமிகு ஆதரவையும், உறுதிப்பாட்டையும் இந்த நேர்மையான அரசாங்கத்தின் மீது அருள்வீராக. இந்நாடு உமது பாதுகாப்பென்னும் தஞ்சத்தின் நிழலின் கீழ் உள்ளது; அதன் மக்கள் உமக்குச் சேவைபுரிகின்றனர். பிரபுவே! உமது விண்ணுலக அருட்கொடையை அவர்களுக்கு வழங்கி, உமது கிருபை, தயை ஆகியவற்றின் பொழிவுகளை வளமாகவும், அபரிமிதமாகவும் ஆக்கிடுவீராக. மதிப்பிற்குரிய இந்த நாடு கௌரவிக்கப்படவும், அதை உமது இராஜ்யத்திற்குள் நுழைந்திடவும் இயலச் செய்வீராக.
சக்திமிக்கவரும், வல்லமை மிக்கவரும், கருணைமிக்கவரும், தயாளமானவரும், நலன் பயப்பவரும், கிருபை நிறைந்த பிரபுவும் நீரே ஆவீர்.
- `Abdu'l-Bahá