Return to BahaiPrayers.net
Facebook
தெய்வீக அருளாளரே! இந்தக் கூட்டம் உமது அழகின்பால் கவரப்பட்டு, உமது அன்பெனும் தீயினால் கொழுந்துவிட்டு எரிந்திடும் அன்பர்களின் கூட்டமாகும். இந்த ஆன்மாக்களை விண்ணுலகத் தேவகணங்களாக ஆக்கிடுவீராக; உமது பரிசுத்த ஆவியின் சுவாசங்கள் வாயிலாக அவர்களை உயிர்பெறச் செய்வீராக; அவர்களுக்குச் சொல்திறன்மிக்க நாவுகளையும், உறுதியான இதயங்களையும் வழங்கிடுவீராக; அவர்களுக்கு விண்ணுலகச் சக்தியையும், கருணைமிக்கத் திறன்களையும் தந்தருள்வீராக; மனுக்குலத்தின் ஒருமையைப் பிரகடனஞ் செய்வோராகவும், மனித உலகில் அன்பு, இணக்கம் ஆகியவற்றுக்குக் காரணமாக இருப்பவர்களாகவும் ஆக்கிடுவீராக; அதனால் அறியாமையினால் ஏற்படும் தப்பெண்ணம் எனும் அபாய இருள் உண்மைக் கதிரவனின் ஒளி வாயிலாக மறையக்கூடுமாக; இந்த இருண்ட உலகமும் ஒளிபெறக் கூடும்; இந்தப் பௌதீக உலகம் ஆவி உலகின் ஒளிக்கதிர்களைக் கிரகிக்கக் கூடும்; இந்த வெவ்வேறான நிறங்கள் ஒரே நிறமாக ஒன்றுபடக் கூடும், மற்றும், போற்றுதல் எனும் மெல்லிசை உமது புனிதம் எனும் இராஜ்யத்திற்கு உயர்ந்திடக் கூடும்.
மெய்யாகவே, நீரே சர்வ சக்திமிக்கவரும், சர்வ வல்லவரும் ஆவீர்.
- `Abdu'l-Bahá