Return to BahaiPrayers.net
Facebook
என் இறைவா, எவ்வாறு உமது அன்பர்கள் உமது உயிரினங்களிடையே உள்ள கிளர்ச்சிக்காரர்களாலும் உமது மக்களிடையே உள்ள கொடுமை இழைப்போராலும் சூழப்பட்டுள்ளனர் என்பதை நீர் பார்க்கின்றீர். உமது அன்பர்களின் புலம்பலும் உமது தேர்ந்தெடுக்கப்பட்டோரின் அழுகுரலும் எழுப்பப்படாத எஞ்சியுள்ள நாடு எதுவுமே கிடையாது. உமது ஆற்றல் என்னும் கரத்தினை உமது சக்தி என்னும் மார்பிலிருந்து வெளிக்கொணர்ந்து அதனைக் கொண்டு உம்மை நேசிப்போர் அனைவருக்கும் உதவிடுமாறு நான் உம்மை வேண்டிக் கொள்கின்றேன்.
என் இறைவா, அவர்களின் கண்கள் உந்தன்பால் திரும்பியுள்ளதையும், அவர்களின் பார்வை உமது பகலூற்று, அன்பு, கடாட்சம் ஆகியவற்றின் மீது பதிந்திருப்பதையும் நீர் பார்க்கின்றீர். என் பிரபுவே, அவர்களது இழிவை மகிமையாகவும், அவர்களின் ஏழ்மையை வளமாகவும், அவர்களின் பலமின்மையை உம்மிலிருந்து உதித்திடும் வலுவாகவும் மாற்றிடுவீராக.
நீர் விரும்பியதைச் செய்யும் சக்தியுடையவர் நீரே. எல்லாம் அறிந்தவரும் சகலமும் அறிவிக்கப்பட்டவரும் உம்மையன்றி வேறெவருமிலர்.
- Bahá'u'lláh