Return to BahaiPrayers.net
Facebook
என் இறைவா, உமது அருட்பொழிவுகள் என்னும் சுவர்க்கத்திலிருந்தும், உமது சலுகைகள் என்னும் பகல் நட்சத்திரத்திலிருந்தும் என்னைத் தடுத்திடாதீர். நீர் எதன் மூலம் அனைத்துப் புலனாகும் புலனாகா பொருள்களையும் ஆட்கொண்டுள்ளீரோ அத் திருமொழியின் மூலமாக என்னையும் உமது தேர்ந்தெடுக்கப்பட்டோரையும் உமது ஊழியர்கள் மத்தியிலும், உமது பிராந்தியங்கள் அனைத்திலும் உமது சமயத்தை மேன்மையுறச் செய்வதனைச் சாதித்திட உதவுமாறு உம்மை வேண்டிக் கொள்கின்றேன். எனவே, உமது திருநூலில் வழங்கியுள்ள ஒவ்வொரு நற்பொருளையும் எனக்கு விதித்திடுவீராக. மெய்யாகவே, நீரே எல்லாம் வல்லவர், என்றும் மன்னிப்பவர், உதார குணமுடையவர்.
- Bahá'u'lláh