Return to BahaiPrayers.net
Facebook
பிரபுவே! அவர்களுக்குத் தகுந்த வெற்றியை வழங்கி, உமது நாள்களில் உந்தன் பொறுமையான ஊழியர்களை வெற்றிப் பெற்றவர்களாக ஆக்கிடுவீராக; ஏனெனில் அவர்கள் உமது பாதையில் உயிர்த் தியாகத்தை நாடியுள்ளனர். அவர்களின் மனங்களுக்கு ஆறுதலையும், அவர்களின் உள்ளார்ந்த ஜீவனை மகிழ்வுறச் செய்யக் கூடியவற்றையும், அவர்களின் இதயங்களுக்கு நம்பிக்கையையும், அவர்களின் உடல்களுக்குச் சாந்தத்தை வழங்கக்- கூடியவற்றையும், அவர்களின் ஆன்மாக்களை, அதி மேலான, இறைவனின் முன்னிலைக்கு உயர்த்திடவும், அதி விழுமிய சொர்க்கத்தையும், உண்மை அறிவும், பண்பும்முடைய மனிதர்களுக்காக நீர் விதித்திட்டப் பேரொளி எனும் ஓய்வில்லங்களை அடைந்திட இயலச் செய்யக்கூடியவற்றை அவர்களுக்குத் தந்தருள்-வீராக. மெய்யாகவே, அனைத்தையும் நீர் அறிவீர், ஆனால் நாங்களோ உமது ஊழியர்களும், உமது அடிமைகளும், உமது கொத்தடிமைகளும், உமது வறியவர்களும் ஆவோம். கடவுளே, எங்கள் பிரபுவே, உம்மைத் தவிர வேறு இறைவனை நாங்கள் வேண்டியதில்லை; இம்மைக்கும் மறுமைக்குமான கருணைக் கடவுளானவரே, உம்மைத் தவிர வேறெவரிடமிருந்தும் நாங்கள் ஆசிகளுக்கோ, கிருபைகளுக்கோ மன்றாடியதில்லை. நாங்கள் வெறும் வறுமை, இல்லாமை, ஆதரவின்மை, நரகம் ஆகியவற்றின் உருவகங்கள் ஆவோம்; ஆனால் உமது முழு உருவே, செல்வம், சுதந்திரம், புகழ், மாட்சிமை, எல்லையற்ற கருணை ஆகியவற்றின் அடையாளமாகும்.
பிரபுவே, எங்களுக்குரிய வெகுமானத்தை, உமக்கு ஏற்றவாறு, இம்மைக்கும் மறுமைக்குமான நன்மையாகவும், மேலுலகிலிருந்து கீழேயுள்ள பூமி வரை நீடிக்கும் எண்ணற்ற அருட்கொடைகளாகவும் மாற்றிடுவீராக.
மெய்யாகவே, எங்கள் பிரபுவான நீரே, எல்லாப் பொருள்களின் பிரபுவும் ஆவீர். உம்மைச் சார்ந்த பொருள்களுக்காக ஏங்கியவாறு; உமது கரங்களுக்குள்ளேயே நாங்கள் சரணடைகிறோம்.
- The Báb