Return to BahaiPrayers.net
Facebook
கடவுளே, என் கடவுளே! அதிவுயரிய மலை உச்சியின் மீதுள்ள, ‘கிழக்கையோ மேற்கையோ சார்ந்திராத’[1] திருவிருட்சமாகிய, புனித விருட்சத்தினுள் தெய்வீக அன்பெனும் தீயை மூட்டியமைக்காக நீர் போற்றப்படுவீராக. அந்தத் தீயானது, அதன் சுடர் மேலுலக வான்படையை நோக்கி உயரும் வரை எரிந்துள்ளது; அதிலிருந்து அந்த மெய்ம்மைகள் வழிகாட்டல் எனும் ஒளியைப் பெற்று, இவ்வாறு உரக்கக் கூவின: ‘மெய்யாகவே சைனாய் மலைச்சரிவின் மீது ஒரு தீயை நாங்கள் கண்ணுற்றோம்.’
கடவுளே, என் கடவுளே! அதன் அனல்வேகம் உலகின் மீதுள்ள அனைத்தையும் இயங்கச் செய்யும் வரை, நாளுக்கு நாள் இத்தீயை அதிகரிப்பீராக; என் பிரபுவானவரே! ஒவ்வோர் இதயத்திலும் உமது அன்பெனும் ஒளியை மூட்டுவீராக; உமது அறிவெனும் ஆற்றலை மனிதர்களின் இதயங்களுக்குள் ஊதியருள்வீராக; உமது ஒருமை எனும் வசனங்களைக் கொண்டு அவர்களின் நெஞ்சங்களை மகிழ்வுறச் செய்வீராக. அவர்களின் கல்லறைகளுள் வசிப்போரை உயிர்பெறச் செய்வீராக; அகந்தையுடையோரை எச்சரிப்பீராக; மகிழ்ச்சியை உலகளாவியதாக ஆக்கிடுவீராக; உமது தெளிவான நீர்களைப் பொழிந்திடுவீராக; வெளிப்படையான பேரொளிகளின் கூட்டத்தில், ‘கற்பூர நீரூற்றில் திடப்படுத்தப்பட்ட’ கோப்பையை அனைவரோடும் பகிர்ந்துகொள்வீராக.
ெய்யாகவே, அளிப்பவரும், மன்னிப்பவரும், என்றும் வாரிவழங்குபவரும் நீரே ஆவீர். மெய்யாகவே கருணைமிக்கவரும், இரக்க-முடையவரும் நீரே ஆவீர்.
- `Abdu'l-Bahá