Return to BahaiPrayers.net
Facebook
அவரே கடவுள்!
பிரபுவே, எனதாண்டவரே, என் அதி அன்புக்குரியவரே! உமது குரலைக் கேட்டு, உமது திருவாக் கிற்குச் செவிசாய்த்து, உமது அழைப்புக்குக் கவனம் செலுத்திய உமது ஊழியர்கள் இவர்களே. அவர்கள் உம்மில் நம்பிக்கை வைத்துள்ளனர், உமது அற்புதங்களைக் கண்ணுற்றுள்ளனர், உமது நிரூபணத்தை உண்மையென ஏற்று உமது ஆதாரத்திற்குச் சாட்சியமளித்துள்ளனர். அவர்கள் உமது வழிகளில் நடந்துள்ளனர், உமது வழிகாட்டலைப் பின்பற்றியுள்ளனர், உமது மர்மங்களைக் கண்டு கொண்டுள்ளனர், உமது திருநூல், உமது சுருள்சுவடியின் வசனங்கள், உமது மடல்கள், உமது நிருபங்கள் ஆகியவற்றின் இரகசியங்களைப் புரிந்து கொண்டுள்ளனர். உமது ஆடையின் நுனியினைப் பற்றி, உமது அங்கி என்னும் ஒளியினையும் மாட்சிமையையும் இறுகப் பிடித்துக் கொண்டுள்ளனர். அவர்களின் காலடிகள் உமது ஒப்பந்தத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, அவர்களின் இதயங்கள் உமது சாசனத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. பிரபுவே! அவர்களின் உள்ளங்களில் உமது தெய்வீக ஈர்ப்புயெனும் ஒளியை ஏற்றி, அன்பு, புரிந்துகொள்ளல் என்னும் பறவையை அவர்களின் நெஞ்சங்களில் பாடிடச் செய்வீராக. அவர்களைச் சக்திமிகு அடையாளங்களாகவும் ஒளிரும் விருதுக்- ்கொடிகளாகவும் உமது திருவாக்கைப் போன்று பரிபூரணமாகவும் ஆக்கிடுவீராக. அவர்கள் வாயிலாக உமது சமயத்தை உயர்வடையச் செய்து உமது கொடிகளை அவிழ்த்துப் பறக்கவிட்டு உமது அற்புதங்களை விரிவாகப் பிரகடனம் செய்வீராக. அவர்களைக் கொண்டு உமது திருவாக்கினை வெற்றிபெறச் செய்து உமது அன்பர்களின் இடைகளை உறுதிப்படுத்துவீராக. உமது நாமத்தினைப் புகழ்ந்திட அவர்களின் நாவுகளைத் தளர்த்தி, அவர்களுக்கு உமது புனித விருப்பம், மகிழ்ச்சி ஆகியவற்றினை நிறுவிட அருட்தூண்டல் அளித்திடுவீராக. உமது புனிதமெனும் இராஜ்யத்தில் அவர்களின் முகங்களை ஒளிரச் செய்து, அவர்களை உமது சமயத்தின் வெற்றிக்காக எழச் செய்வதன் வழி, அவர்களின் மகிழ்வினைப் பூரணமாக்குவீராக.
பிரபுவே, நாங்கள் வலுக்குறைவானவர்கள், உமது புனிதத்தின் நறுமணங்களைப் பரப்பிட எங்களைப் பலப்படுத்துவீராக; ஏழைகள், உமது தெய்வீக ஒருமை யெனும் பொக்கிஷங்களிலிருந்து எங்களைச் செல்வந்தராக்குவீராக; ஆடையற்று இருக்கிறோம், எங்களுக்கு உமது வள்ளன்மை என்னும் அங்கியினை அணிவிப்பீராக; நாங்கள் பாவம் நிறைந்தவர்கள், உமது அருள், உமது சலுகை, உமது மன்னிப்பு ஆகியவற்றினால் எங்களின் பிழைகளைப் பொறுத்தருள்வீராக. மெய்யாகவே, நீரே தோழர் , உதவுபவர், கிருபையாளர், அருளாளர், வல்லவர், சக்தி மிக்கவர்.
திடமும், பற்றுறுதியும் உள்ளோர் மீது ஒளியுளெல்லாம் ஒளி இலயித்திடுமாக.
- `Abdu'l-Bahá