Return to BahaiPrayers.net
Facebook
கடவுளே, நாமங்கள் அனைத்தின் இறைவனே, விண்ணுலகங்களை உருவாக்கியவரே! எந்த நாமத்தின் வாயிலாக, உந்தன் வலிமையின் பகலூற்றானவரும், உந்தன் சக்தியின் உதயபீடமானவருமான அவர் அவதரிக்கச் செய்யப்பட்டரோ, எதன் மூலமாக ஒவ்வொரு திடப் பொருளும் வழிந்தோடிட செய்யப்பட்டதோ, மற்றும் உயிரற்ற ஒவ்வொரு சடலமும் மீண்டும் உயிர்பெறச் செய்யப்பட்டதோ; மற்றும், ஒவ்வோர் அசையும் ஆவி உறுதிச் செய்யப்பட்டதோ, அவரைக் கெஞ்சிக் கேட்கின்றேன் — உம்மைத்தவிர வேறெவருடனான எல்லாப் பற்றுக்களையும் என்னிலிருந்து பற்றறுத்திடவும், உமது சமயத்திற்குச் சேவையாற்றிடவும், உந்தன் மாட்சிமையின் சக்தியின் வாயிலாக, நீர் விரும்பியவற்றையே விரும்பிடவும், உமது விருப்பத்தின் நல்மகிழ்வுக்கு உகந்தவற்றைச் செய்திடவும், என்னை இயலச் செய்யுமாறு நான் மன்றாடுகிறேன்.
என் கடவுளே, உம்மைத் தவிர வேறெவரையும் நாடாதிருக்கும் அளவிற்கு மேலும் என்னைச் செல்வந்தராக்கிடக் கூடியவற்றை எனக்கே விதித்தருள உம்மிடம் கெஞ்சிக் கேட்கிறேன். என் கடவுளே, உம்மை நோக்கி என் முகத்தைத் திருப்பிடவும், என் கரங்கள் உமது கிருபை எனும் கயிற்றினைப் பற்றிக் கொள்ளவும் செய்திட்ட என்னை நீர் பார்க்கின்றீர். உந்தன் கருணையை என் மீது அனுப்பிடுவீராக; உம்மால் தேர்ந்தெடுக்கப் பட்டோருக்கென நீர் எழுதியுள்ளவற்றை எனக்கும் எழுதிடுவீராக. உமக்கு விருப்பமானவற்றைச் செய்வதற்குச் சக்திப்படைத்தவர் நீரே. என்றென்றும் மன்னிப்பவரும், சர்வ வல்லமை வாய்ந்தவரான கடவுள், உம்மைத் தவிர வேறிலர்.
- Bahá'u'lláh