Return to BahaiPrayers.net
Facebook
பிரபுவே, என் இறைவா, நீர் போற்றப்படுவீராக! அக நோக்குடைய ஒவ்வொரு மனிதரும் உமது இறைமையையும், உமது மாட்சிமையையும் ஒப்புக் கொள்வார். உய்த்துணரக் கூடிய ஒவ்வொரு கண்ணும் உமது மாட்சிமையின் மகத்துவத்-தையும், உமது வலிமையின் வலிந்தீர்க்கவல்ல சக்தியினையும் கண்ணுறுகின்றது. சோதனைகள் என்னும் காற்று உமது விருப்பத்தின்பால் முழு விசுவாசம் கொண்டோர் போன்றவர்களை உமது அரசவையினை அணுகுவதிலிருந்து பின்னடையச் செய்வதிலும், தடுப்பதிலும் தோல்வி அடைந்தே ஆகவேண்டும்.
உமது அன்பெனும் தீபம் அவர்கள் இதயங்களில் எரிந்து கொண்டிருக்கின்றது என்றும், உமது மென்மையெனும் ஒளி அவர்கள் நெஞ்சங்களில் ஏற்றப்பட்டுள்ளது என்றும், நான் நினைக்கின்றேன். துரதிர்ஷ்டம் உமது சமயத்திலிருந்து அவர்களைத் திசை மாறச் செய்யும் திறமையற்றது; மேலும், மாறிடும் அதிர்ஷ்ட சூழல்கள் அவர்களை உமது நல்விருப்பத்திலிருந்து என்றுமே வழி தவறிப் போகச் செய்திடா.
என் கடவுளே, அவர்கள் சாட்சியாகவும், உம்மிடமிருந்து பிரிவுற்றதால் அவர்களின் நெஞ்சங்கள் விடும் பெருமூச்சின் சாட்சியாகவும், ஆன்மாக்களை, நீர் விதித்து அருளியவற்றினால் பேணி வளர்க்குமாறும், உமது எதிரிகளின் பொல்லாங்கிலிருந்து அவர்களைப் பாது-காக்குமாறும், அவர்களுக்கு எவ்விதப் பயமும் ஏற்படாமலும், அவர்களுக்கு எவ்விதத் துன்பமும் நிகழாமலும் பார்த்துக் கொள்ளுமாறு உம்மை நான் வேண்டிக் கொள்கிறேன்.
- Bahá'u'lláh