Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே, நீர் போற்றிப் புகழப்படுவீராக! உந்தன் நேசர்களின் பெருமூச்சினிலும், உம்மைக் கண்ணுற ஏங்குவோர் சிந்தியக் கண்ணீரின் பெயராலும், உமது நாளில் உந்தன் மென்கருணையை எனக்குத் தரமறுத்திடாதீர் என்றும், அல்லது உந்தன் வதனத்திலிருந்து பிரகாசித்திடும் ஒளியின் முன் உமது ஒருமைத்தன்மையைப் புகழ்ந்து பாடிடும் புறாவின் கீதங்களை நான் பெறாதிருக்கச் செய்திடாதீர் என்றும் நான் உம்மிடம் மன்றாடுகிறேன். என் கடவுளே! நான் ஆழ்ந்த துயரில் உள்ளேன்! சகலத்தையும் கொண்டுள்ளவர் எனும் உந்தன் பெயரை நான் இறுகப் பற்றிக்கொண்டுள்ளதைப் பாருங்கள். நிச்சயமாக நான் அழியக் கூடியவனே. அழியவியலாதவர் எனும் உந்தன் நாமத்தை நான் பற்றிக்கொண்டிருப்பதைப் பாருங்கள். ஆகையால், மென்மையானவரான, அதிவுயரியவரான நீர், என்னை, எனது தான் எனும் சுபாவத்திற்கும், தீய ஆசைகளின் ஈர்ப்புகளுக்கும் கைவிட்டு விடாதீர் என நான் உம்மிடம் மன்றாடுகிறேன். உந்தன் சக்தி எனும் கரத்தால் என் கரத்தினைப் பிடித்துக்கொள்வீராக, மேலும் எனது பகட்டுகள், பயனற்ற கற்பனைகள் ஆகிய ஆழங்களிலிருந்து என்னை விடுவித்து, நீர் வெறுக்கக்கூடிய அனைத்-திலிருந்தும் என்னைத் தூய்மைப்படுத்துவீராக.
ஆதலால், என்னை, உம்மிடம் முழுமையாக திரும்பிடவும், உம்மிடமே என் முழு நம்பிக்கையை வைத்திடவும், உம்மை என் புகலிடமாக நாடிடவும், உமது வதனத்தின்பால் விரைந்திடவும் செய்வீராக. மெய்யாகவே, உந்தன் வல்லமையின் சக்தியின் வாயிலாக நீர் விரும்பியதைச் செய்யவல்லவரும், உந்தன் விருப்பம் எனும் ஆற்றலின் வழியாக நீர் தேர்வுச்செய்யும் எதனையும் ஆணையிடுபவரும், நீரே ஆவீர். உமது கட்டளையின் இயக்கத்தை எவரொருவராலும் எதிர்த்திடவியலாது; உந்தன் நியமனத்தின் மார்க்கத்தைத் திசை திருப்பிட எவராலும் இயலாது. உண்மையாகவே, சர்வ வல்லவரும், சர்வ மகிமைமிக்கவரும், அதி வளமிக்கவரும் நீரே ஆவீர்.
- Bahá'u'lláh