Return to BahaiPrayers.net
Facebook
இன்னல் தீர்ப்போன் இறைவனன்றி யாருளர்? சொல்: இறைவனே போற்றி! அவரே கடவுள்! யாவரும் அவர் ஊழியர், யாவரும் அவர் சொற் பணிவர்!
— பாப் பெருமானார்
என் கடவுளே, எல்லாத் திசைகளிலிருந்தும் என் மீது துன்பங்கள் பொழிந்துள்ளதையும், அத்துடன், அவற்றை நீக்கவோ, மாற்றவோ உம்மைத் தவிர வேறு எவருக்கும் இயலாது என்பதையும் நீர் நன்கு அறிவீர். உமது மண்ணுலக வாழ்க்கையில் ஓர் ஆன்மாவின் ஸ்தானத்தை, வலிந்தீர்க்கவல்ல உமது சக்தியினைக் கொண்டு மேன்மைப் படுத்த வேண்டுமென்றும், இவ்வுலகின் வீண் பகட்டுகளின்பால் அவ்வான்மாவின் மனம் சென்றிடாதிருக்க வேண்டுமென்றும் நீர் விரும்பினாலன்றி, எந்த ஓர் ஆன்மாவுக்கும் நீர் கொடுந்துன்பங்கள் விளைவிக்க மாட்டீர் என்று, உம் மீதுள்ள எனதன்பின் காரணமாக, நிச்சயமாகத் எனக்குத் தெரியும். உண்மையாகவே, எல்லாச் சூழல்களிலும் விண்ணுலகங்களிலும் மண்ணு-லகிலுமுள்ள அனைத்தையும் நான் உடைமையாகக் கொள்வதை விட, உந்தன் நினைவையே மேலாக விரும்பிடுவேன் என்பதை, நீர், நன்கு அறிந்திருக்கின்றீர்.
என் கடவுளே, உமக்குக் கீழ்ப்படிதலிலும் உமதன்பிலும் என் இதயத்தைப் பலப்படுத்தி, உமது பகைவர்களின் கூட்டத்தினிடமிருந்து நான் முற்றாக விலகியிருக்கும் நிலையினை, எனக்கு வழங்கிடுவீராக. மெய்யாகவே, உமது ஒளியின் மீது ஆணை இடுகின்றேன்; உம்மைத் தவிர வேறெதனையும் நான் விரும்வில்லை; உமது கருணையைத் தவிர வேறெதனையும் நான் விழைவதில்லை; உமது நீதியைத் தவிர வேறெதன்பாலும் நான் அச்சம் கொள்வதில்லை; என்னையும் மற்றும் நீர் நேசிப்போரையும் உமது விருப்பத்திற்கேற்ப மன்னித்தருளுமாறு உம்மிடம் வேண்டிக் கொள்கிறேன். மெய்யாகவே, நீரே எல்லாம் வல்லவர், வள்ளன்மை மிக்கவர்.
விண்ணுலகங்கள், மண்ணுலகம் ஆகியவற்றின் அதிபதியே, எல்லா மனிதர்களின் புகழ்ச்சிக்கும் மேலாக வரம்பின்றி உயர்த்தப்பட்டிருப்பவர் நீரே, உமது உண்மை ஊழியர்களின் மீது அமைதி நிலவுமாக; எல்லா உலகங்களின் பிரபுவாகிய இறைவனுக்கே ஒளி உரியதாகுக.
- The Báb