Return to BahaiPrayers.net
Facebook
என் இறைவா, உமது வலிமை சாட்சியாக உம்மை மனப்பூர்வமாக வேண்டிக் கொள்கின்றேன்! சோதனைக் காலங்களில் என்னைத் தீங்கெதுவும் தாக்காதிருக்கச் செய்வீராக; கவனக் குறைவான வேளைகளில் உமது அருட்தூண்டுதலின் வாயிலாக, எனது காலடிகளை நேர்வழியில் நடத்திடுவீராக. நீரே கடவுள், நீர் விரும்பியதைச் செய்யும் ஆற்றல் படைத்தவர் நீரே. எவருமே உமது விருப்பத்தை எதிர்க்கவோ, உமது நோக்கத்தைத் தடுத்து நிறுத்தவோ இயலாது.
- The Báb