Return to BahaiPrayers.net
Facebook
அவரே கடவுள்! ஒப்பற்றப் பிரபுவே! உமது சர்வ ஞானத்தின் வாயிலாக மனிதர்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என விதித்துள்ளீர். அதனால் இப்படைப்புலகில் மனித இனம் வழிவழி தோன்ற வேண்டுமென்றும், அதனால், உலகம் உள்ளவரை அவர்கள் உமது ஒருமைத் தன்மை என்னும் திருவாயிலில் தாழ்மையுடனும் வழிபாட்டுடனும், மரியாதை-யுடனும் வணக்கத்துடனும், பயபக்தியுடனும் போற்றுதலுடனும் உந்தன் சேவையில் ஈடுபடுவராக. “எம்மை வணங்குவதற்காக அல்லாது யாம் வேறெதற்காகவும் ஆவிகளையும் மனிதர்களையும் படைத்தோமில்லை.” ஆகவே உமது அன்பு என்னும் கூட்டினில் இவ்விரு அன்புப் பறவைகளையும் உமது கருணை என்னும் சுவர்க்கத்தில் ஒன்றிணைத்துத் தொடர்ச்சியாக உமது அருளினை ஈர்த்திட வழிவகுப்பீராக; அதனால் இவ்விரு அன்புக் கடல்களின் ஒன்றிணைப்பின் வழியாக இளகிய உணர்ச்சியலைகள் தோன்றி தூய்மையும் நன்மையும் மிகுந்த முத்துக்களை வாழ்க்கை என்னும் கரையில் சேர்த்திடுமாக. அவர்களுக்கிடையே கடந்து செல்லக்கூடாத தடை ஒன்று இருக்கின்றது. உனது பிரபுவின் அருட்கொடைகளில் எதை நீ மறுப்பாய்? ஒவ்வொன்றிலிருந்தும் அவர் உயர்வான முத்துக்களையும் உயர்வு குறைந்த முத்துக்களையும் தோற்றுவிக்கின்றார்.
அன்புள்ள பிரபுவே! இத்திருமணத்திலிருந்து பவளமும், முத்தும் தோன்றிடச் செய்வீராக. மெய்யாகவே, நீரே சர்வ சக்தி வாய்ந்தவர், அதி உயர்வானவர், என்றென்றும் மன்னித்தருள்பவர்!
- `Abdu'l-Bahá