Return to BahaiPrayers.net
Facebook
என் இறைவா, ஒளி உமக்கே உரியதாகட்டும்! மெய்யாகவே, இந்த உமது ஊழியனும் உமது பணிப்பெண்ணும் உமது கருணை என்னும் நிழலின் கீழ் கூடி உமது தயை, தாராளத் தன்மை ஆகியவற்றினால் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளனர். பிரபுவே! உமது உலகிலும், உமது இராஜ்யத்திலும் அவர்களுக்கு உதவி புரிந்து உமது வள்ளன்மை, அருள் ஆகியவற்றினால் அவர்கள்பால் எல்லா நன்மைகளையும் அருள்வீராக. பிரபுவே! உந்தன் பணியில் அவர்களை உறுதிப்படுத்தி உமது ஊழியத்தில் அவர்களுக்கு உதவி புரிவீராக. உமது உலகில், உமது நாமங்களின் அடையாளங்களாக அவர்களை ஆகச் செய்து, உமது எல்லையற்ற அருளினாலும் வள்ளன்மையினாலும் அவர்களை இவ்வுலகிலும் வருவுலகிலும் பாதுகாப்பீராக. பிரபுவே! அவர்கள் உமது கருணை என்னும் இராஜ்யத்தின்பால் தாழ்வணங்கி உமது ஒருமை என்னும் இராஜ்யத்தின்பால் வணங்கி வேண்டுகின்றனர். மெய்யாகவே, இவர்கள் உமது கட்டளைக்கேற்ப திருமணம் செய்து-கொண்டுள்ளனர். இறுதிக்காலம் வரை அவர்களை, ஒற்றுமைக்கும் அமைதிக்கும் அடையாளமாகச் செய்வீராக.
மெய்யாகவே, நீரே சர்வசக்தி வாய்ந்தவர், எங்கும் வியாபித்துள்ளவர், எல்லாம் வல்லவர்!
- `Abdu'l-Bahá