Return to BahaiPrayers.net
Facebook
என் பிரபுவே! என் பிரபுவே! இவ்விரு பிரகாசமிகு வட்டங்களும் உமதன்பில் திருமணம் புரிந்துள்ளனர்; உமது புனித நுழைவாயிலில் ஊழியம் செய்திட இணங்கியுள்ளனர், உமது சமயத்திற்குத் தொண்டு செய்திட ஒன்றிணைந்-துள்ளனர். என் பிரபுவே, கருணைமயமானவரே, இத்திருமணத்தை உமது அளப்பரிய அருள் இழைந்தோடும் ஒளிவிளக்குகளாகவும், உமது கொடைகளின் பிரகாசமிகுக் கதிர்களாகவும் ஆக்கிடுவீராக, அன்புதவி புரிபவரே, என்றும் வழங்குபவரே, அதன்வழி உம்மிடமிருந்து அருள் என்னும் மேகங்களாகப் பொழிந்திடும் அன்பளிப்புகளின் வழி இம்மேன்மையான விருட்சத்திலிருந்து பசுமையும் செழிப்பும் மிக்கக் கிளைகள் துளிர்த்திடக் கூடும்.
மெய்யாகவே தாராளத் தன்மையுடையவர் நீரே, மெய்யாகவே நீரே எல்லாம் வல்லவர், மெய்யாகவே இரங்குபவரும் கருணை மயமானவரும் நீரே ஆவீர்!
- `Abdu'l-Bahá