Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே, உமது அருகே நெருங்கிடவும், உந்தன் அரியாசனத்தின் அருகில் வசித்திடவும் என்னை அனுமதிப்பீராக; ஏனெனில், உம்மிடமிருந்து வெகுதூரம் இருப்பதென்பது என்னைக் கிட்டத்தட்ட நிர்மூலமாக்கிவிட்டது. உமது கிருபை எனும் சிறகுகளின் நிழலின் கீழ் என்னை இளைப்பாறச் செய்வீராக; ஏனெனில், உம்மை விட்டுப் பிரிந்திருத்தல் எனும் தீச்சுடரானது, என்னுள் என் இதயத்தை உருக்கிவிட்டது. மெய்யாகவே வாழ்வெனும் நதியின் அண்மைக்கு என்னை ஈர்த்திடுவீராக, ஏனெனில், உம்மைத் தேடுவதெனும் அதன் முடிவில்லா முயற்சியில் எனதான்மா தாகத்தினால் எரிகின்றது. என் கடவுளே, என் வேதனையின் கசப்பினை எனது பெருமூச்சு பறைசாற்றுகின்றது; மேலும், நான் சிந்தும் கண்ணீரோ உம் மீதான எனதன்புக்குச் சாட்சியம் பகர்கின்றது.
உந்தன் நாள்களில் உம்மை அறிந்து, உமது இறையாண்மையை ஒப்புக்கொண்டோருள் ஒருவராக நாங்கள் கணக்கிடப்பட அருளுமாறு, நீரே உம்மைப் போற்றிடும் போற்றுதலினாலும், உமது சொந்த சாராம்சத்தை நீரே புகழ்ந்திடும் புகழின் பெயராலும், நான் உம்மிடம் மன்றாடுகிறேன். என் கடவுளே, உந்தன் அன்புக் கருணை எனும் உயிர் நீரைக், கருணை எனும் விரல்களிலிருந்து பருகிட, எங்களுக்கு உதவுவீராக; அதனால் நாங்கள் உம்மைத் தவிர மற்றெல்லாவற்றையும் முற்றிலும் மறந்திடவும்; உம்மோடு மட்டுமே ஈடுபட்டிருக்கவும் இயலுமாக. நீர் விரும்பியதைச் செய்வதற்குரிய சக்தி படைத்தவர் நீரே. வல்லவரும், ஆபத்தில் உதவுபவரும், சுய ஜீவியருமான உம்மைத் தவிர வேறு கடவுள் இலர்.
மன்னருக்கெல்லாம் மன்னரானவரே, உந்தன் நாமம் போற்றப்படுமாக!
- Bahá'u'lláh