Return to BahaiPrayers.net
Facebook
படைப்பாளரும், அரசரும், சர்வ நிறை- வளிப்பவரும், அதிவுயர்வானவரும், மனிதர் எல்லாரும் உதவிக்காக இறைஞ்சுகின்ற உமது பிரபுவான அவரது திருநாமத்தினால்.
கூறுவீராக: என் கடவுளே! விண்ணுலகங்- களையும், மண்ணுலகையும் படைத்தவரே, இராஜ்யத்தின் பிரபுவே! என் இதயத்தின் இராஜ்யங்களை நீர் நன்கறிவீர்; இருப்பினும், உந்தன் உயிருரு உம்மைத் தவிர மற்றனைத்தின் அறிவுக்கெட்டாததாகும். என்னைச் சார்ந்த எதனையும் நீர் காண்கின்றீர்; இருந்தாலும் இதை உம்மைத் தவிர வேறெவராலும் செய்திட இயலாது. உந்தன் கிருபையின் வாயிலாக, உம்மைத் தவிர மற்றனைத்தையும் தவிர்த்திட என்னால் இயலச் செய்வனவற்றை எனக்குத் தந்தருள்வீராக. மேலும், உம்மைத் தவிர மற்றனைவரிடம் இருந்தும் என்னைத் தனித்து நிற்க இயலச் செய்யக்கூடியவற்றை எனக்கு விதித்திடுவீராக. எனது வாழ்வின் பலனை இவ்வுலகிலும் மறுவுலகிலும் நான் அடைவதற்கு எனக்கு அருள் பாலிப்பீராக. உந்தன் கிருபையின் வாயில்களை என் எதிரே திறந்து, உமது மென்கருணை, அருட்கொடைகள் ஆகியவற்றை அருள்கூர்ந்து எனக்கு வழங்கிடுவீராக.
நிறைந்த கிருபைக்குரிய பிரபுவானவரே! உந்தனின் விண்ணுலக ஆதரவு உம்மை நேசிப்போரைச் சூழட்டுமாக; நீர் கொண்டுள்ள பரிசுகளையும் கொடைகளையும் எங்களுக்கு வழங்கிடுவீராக. எல்லாப் பொருள்களையும் கடந்து நீர் எங்களுக்குப் போதுமானவராக இருந்திடுவீராக; எங்களின் பாவங்களை மன்னித்து, எங்கள் மீது கருணை காட்டுவீராக. எங்கள் பிரபுவும், படைப்புப் பொருள்கள் அனைத்தின் பிரபுவும் நீரே ஆவீர். உம்மைத் தவிர வேறெவரிடமும் நாங்கள் உதவி கோருவதில்லை; உந்தன் அன்பாதரவைத் தவிர வேறொன்றையும் நாங்கள் வேண்டுவதில்லை. அருட்கொடைக்கும் கிருபைக்குமுரிய பிரபுவும், வென்றிடவியலாத சக்திமிக்கவரும், உமது வடிவமைப்புகளில் அதி திறன்வாய்ந்தவரும் நீரே ஆவீர். சகலத்தையும் கொண்டுள்ளவரும், அதிவுயர்வானவருமான உம்மைத் தவிர, கடவுள் வேறிலர் .
என் பிரபுவே, தூதர்கள், புனிதர்கள், நேர்மையாளர்கள் ஆகியோர் மீதும் உந்தன் ஆசிகளை வழங்கிடுவீராக. மெய்யாகவே, ஒப்பற்றவரும், சர்வ வசீகரமானவருமான கடவுள், நீரே ஆவீர்.
- The Báb