Return to BahaiPrayers.net
Facebook
கடவுளே, என் கடவுளே! எனது நம்பிக்கையும் எனது நேசரும், எனது அதி உயரிய இலட்சியமும் ஆவலும் நீரே ஆவீர்! உமது தேசத்தினில் என்னை உமது அன்பின் ஒரு கோபுரமாகவும், உமது உயிரினங்களின் மத்தியில் உமது அறிவின் ஒளிவிளக்காகவும், உமது இராஜ்யத்தில் தெய்வீக அருட்கொடையின் விருதுக்கொடியாகவும் ஆக்குமாறு மிக்கத் தாழ்மையுடனும் பூரண பக்தியுடனும் உம்மைப் பிரார்த்திக்கின்றேன்.
உம்மைத் தவிர மற்றெல்லாவற்றிலிருந்தும் தங்களைப் பற்றறுத்துக் கொண்டும், இவ்வுலகின் நிலையற்ற பொருள்களிலிருந்து தங்களைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டும், பயனற்ற எண்ணங்களை எழுப்புவோரின் தூண்டுதல்- களிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு-முள்ள அன்பர்களுள் ஒருவனாக என்னைச் சேர்த்துக் கொள்வீராக.
உமது இராஜ்யத்தினின்று தோன்றிடும் ஆவி என்னும் உறுதிப்பாட்டின் வழி என் இதயத்தை மகிழ்ச்சியினால் பரவசமடையச் செய்வீராக, உமது சர்வ வல்லமைமிகு ஒளி என்னும் இராஜ்யத்திலிருந்து தெய்வீக உதவியெனும் சேனைகள் என்பால் தொடர்ச்சியாக இறங்கிடுவதைக் கண்ணுறுவதன் மூலமாக என் கண்களை ஒளிரச் செய்வீராக.
நீர், உண்மையாகவே, எல்லாம் வல்லவர், ஒளிமய மானவர், சர்வ சக்தி வாய்ந்தவர்.
- `Abdu'l-Bahá