Return to BahaiPrayers.net
Facebook
கடவுளே என் கடவுளே! எல்லாவற்றிலிருந்தும் பற்றறுத்தல் எனும் கிண்ணத்தை எனக்காக நிரப்பிடுவீராக; மற்றும் உமது பேரொளிகள், அருட்கொடைகள் எனும் சபையில், உம்மை நேசித்தலெனும் மதுரசத்தைக் கொண்டு, என்னை மகிழ்வுறச் செய்வீராக. கட்டுக்கடங்கா உணர்ச்சி, ஆசை, ஆகியவற்றின் தாக்குதல்களிலிருந்து என்னை விடுவிப்பீராக; என்னிடமிருந்து இந்த நரக உலகின் விலங்குகளை, உடைத்திடுவீராக; உந்தன் வானுலக இராஜ்யத்திற்குப் பரவசத்தால் என்னை ஈர்த்திடுவீராக; மேலும் பணிப்பெண்களின் மத்தியில், உமது புனிதமெனும் சுவாசங்களைக் கொண்டு எனக்குப் புத்துயிரூட்டுவீராக.
பிரபுவே, உந்தன் அருட்கொடைகளின் ஒளிகளைக் கொண்டு என் வதனத்தைப் பிரகாசிக்கச் செய்வீராக; யாவற்றையும் அடிப்பணியச் செய்திடும் உந்தன் வலிமையின் அடையாளங்களைக் கண்ணுறும், என் கண்களை ஒளிபெறச் செய்வீராக; பொருள்கள் அனைத்தையும் சூழ்ந்துள்ள உமது அறிவின் பேரொளியால், என் இதயத்தை மகிழ்வுறச் செய்வீராக; ஆன்மாவைப் புத்துணர்வுப் பெறச் செய்திடும் உந்தனின் பெரும் களிப்பூட்டும் நற்செய்தியால் என் ஆன்மாவை இன்புறச் செய்வீராக; அதனால், இம்மைக்கும், மறுமை இராஜ்யத்திற்குமான அரசரே, அரசாட்சிக்கும் வலிமைக்கும் உரிய பிரபுவே, நான் உமது அடையாளங்களையும், சான்றுகளையும் எங்கும் பரவச் செய்தும், உந்தன் சமயத்தைப் பிரகடனம் செய்தும், உமது போதனைகளை மேம்படுத்தி, உமது சட்டத்திற்குச் சேவை புரிந்தும், உந்தன் திருமொழியை உயர்த்திடவும் கூடுமாக.
மெய்யாகவே சக்திமிக்கவரும், என்றும் வழங்குபவரும், பேராற்றல்மிக்கவரும், சர்வ வல்லமைப் பொருந்தியவரும் நீரே ஆவீர்.
- `Abdu'l-Bahá