Return to BahaiPrayers.net
Facebook
என் இறைவா, என்னை உமது நேர்வழியை நன்கு உணர்ந்துகொள்ள உதவியமைக்-காகவும், உயர்வுமிக்கப் பிரகடனத்தை எனது பார்வைக்குமுன் வெளிப்படுத்தி, உமது வெளிப்பாடு என்னும் பகலூற்றின்பாலும் உமது சமயமெனும் நீரூற்றின்பாலும் எனது முகத்தைத் திருப்பிட உதவியமைக்காகவும், எனதாவலே, உமது நாமத்தினை மிகைப்படுத்தி உமக்கு நன்றி நவில்கின்றேன்; அதே வேளையில், உமது ஊழியர்களும் உமது மக்களும் உம்மிடமிருந்து அப்பால் திரும்பியுள்ளனர். நித்தியம் என்னும் இராச்சியத்திற்குப் பிரபுவானவரே, உமது பேரொளி என்னும் எழுதுகோல் ஆனவரின் கிரீச்சுக் குரலினாலும், பசுமையான விருட்சத்தினின்று கூவியழைக்கும் எரியும் நெருப்பினாலும், பஹாவின் மக்களுக்குப் பிரத்தியேகமாகத் தேர்ந்தெடுத்துள்ள மரக்கலத்தினாலும், நான், உந்தன்பால் எனது அன்பில் உறுதியாய் இருக்க அனுமதித்ததற்காகவும், உமது திருநூலில், நீர், எனக்காக நிர்ணயித்துள்ளவைக்காகவும் மகிழ்ச்சி-யுறவும், உமது சேவையில் உறுதியாக நிலைத்திருக்கவும் அனுமதிக்குமாறு உம்மிடம் இறைஞ்சுகின்றேன். மேலும், என் இறைவா, உமது ஊழியர்கள் சமயத்தை மேன்மையுறச் செய்திடுவதற்கான சேவையை ஆற்றிடவும், நீர் உமது திருநூலில் வெளிப்படுத்தியுள்ளவற்றைக் கடைப்பிடிக்கவும் கருணை கூர்ந்து உதவிடுவீராக.
மெய்யாகவே, வலிமைமிக்கப் பிரபுவானவர் நீரே; நீர் எதனை விரும்புகின்றீரோ அதனை விதிக்கவல்ல சக்தியைக் கொண்டிருக்கின்றீர்; மேலும், படைப்புப் பொருள்கள் அனைத்தின் மீதும் அதிகாரத்தை உமது கையில் வைத்திருக்கின்றீர். ஆற்றல் அனைத்தையும் கொண்டுள்ள, சகலமும் அறிந்த, சர்வமும் அறிந்த இறைவன் உம்மையன்றி வேறெவருமிலர்.
- Bahá'u'lláh