Return to BahaiPrayers.net
Facebook
கடவுளே, என் கடவுளே! குற்றங்களை உணர்ந்து நான் உந்தன்பால் திரும்பியுள்ளேன்; மெய்யாகவே நீரே மன்னிப்பவரும், இரக்க-முடையவரும் ஆவீர்.
கடவுளே, என் கடவுளே! உம்மிடமே நான் திரும்பி வந்துள்ளேன்; மெய்யாகவே, நீரே என்றும் மன்னிப்பவரும், கிருபையாளரும் ஆவீர்.
கடவுளே, என் கடவுளே! உந்தன் அருட்கொடை எனும் கயிற்றை நான் இறுகப் பற்றிக்-கொண்டுள்ளேன்; விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்தின் கருவூலமே உம்மிடம் உள்ளது.
கடவுளே, என் கடவுளே! உம்மை நோக்கி நான் விரைந்துள்ளேன்; மெய்யாகவே நீரே, மன்னிப்பவரும், பொங்கிவழியும் கிருபையின் பிரபுவும் ஆவீர்.
கடவுளே, என் கடவுளே! உந்தன் கிருபை எனும் விண்ணுலக மதுரசத்திற்காக நான் தாகமுற்றுள்ளேன்; மெய்யாகவே நீரே வழங்கு-பவரும், வள்ளன்்மையாளரும், கிருபையாளரும், சர்வசக்திமிக்கவரும் ஆவீர்.
கடவுளே, என் கடவுளே! உமது சமயத்தை நீர் வெளிப்படுத்தியுள்ளீர், உமது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளீர், மற்றும் உந்தன் ஆதரவைப் பெற்றவர்களின் இதயங்களை உந்தன்பால் ஈர்த்திடக்கூடியவற்றை உமது கிருபை எனும் சொர்க்கத்திலிருந்து கீழே அனுப்பியுள்ளீர் என்பதற்கு நான் சாட்சியமளிக்கின்றேன். உமது உறுதியான கயிற்றினை இறுகப் பற்றிக்கொண்டும், உந்தன் பிரகாசமிகு ஆடையின் நுனியைப் பற்றிக்கொண்டுமுள்ளவன் நலம் பெறுவானாக!
பிரார்த்தனையைச் செவிமடுக்கும், பிரார்த்தனைக்குப் பதிலளிக்கும் கடவுளே, உமது திருவதனத்தின் ஒளியை நோக்கித் திரும்புவதைப், பாவம் புரிந்தோரின் பத்திரச் சுருளில் தடுத்திடாதவர்களாகிய, உம்மீது பக்திக் கொண்டோரின் பட்டியலில், உமது ஒளிபொருந்திய எழுதுகோல், என் பெயரையும் பதிவுச் செய்திடுமாறு, உயிருருக்கள் அனைத்திற்கும் பிரபுவானவரும், புலனாகுவது, புலனாகாதது ஆகியவற்றின் மன்னரும், உந்தன் சக்தி, உந்தன் மாட்சிமை, மற்றும் உந்தன் மேன்மை ஆகியவற்றினால், நான் உம்மிடம் கேட்டுக் கொள்கிறேன்.
- Bahá'u'lláh