Return to BahaiPrayers.net
Facebook
பிரபுவே எனதாண்டவரே, நீர் மகிமைப்படுத்தப்படுவீராக! யாவும் உமது அழகிலிருந்து திரும்பிச் சென்றுவிட்ட இவ்வேளையில், உமது சமயத்தை வெளிப்படுத்தியவரான அவரிடமிருந்து அலட்சியமாகத் திரும்பிச் சென்றுள்ள இந்நாள்களில், நான் உம்மை நினைவுக்கூர்ந்து, உமது புகழைப் பாடிடவும் எனக்கு அருள் கூர்ந்திடுவீர் என்றும், உந்தன் உண்மையை மறுத்திட்ட உமது உயிரினங்களால் கடுமையாகத் தாக்கப்பட்டும், எந்த நாவும் வருணிக்கவியலாத துயரங்களால் சூழப்பட்டுமுள்ள, உம்மை உந்தன் அதி உயரிய நாமமானவரை நான் மன்றாடிக் கேட்கின்றேன்.
உமதன்பையும், உமது நினைவையும் உறுதியாகப் பற்றிக்கொள்வதற்கு என்னை இயலச் செய்வீராக என நான் உம்மிடம் மன்றாடுகிறேன். மெய்யாகவே, இது என் சக்திக்குட்பட்டதாகும்்; என்னுள் இருப்பவை அனைத்தையும் அறிந்தவரும் நீர் ஒருவரே ஆவீர். உண்மையாகவே, நீரே யாவற்றையும் மதிப்பிட்டு, அறிந்தவர். என் பிரபுவே, உலக முழுமையும் ஒளிரச் செய்துள்ள, உந்தன் வதன ஒளியின் பிரகாசங்களை என்னை இழந்திடும்படிச் செய்திடாதீர். அதி சக்திவாய்ந்தவரும், சர்வ ஒளிமயமானவரும், என்றும் மன்னிப்பவருமான இறைவன், உம்மைத் தவிர வேறிலர்.
- Bahá'u'lláh