Return to BahaiPrayers.net
Facebook
பிரபுவே, எனதாண்டவரே!
உமது அன்பர்களை உமது சமயத்தில் உறுதியாய் இருக்கவும் உம் வழியில் நடக்கவும் உமது சமயத்தில் பற்றுறுதியுடன் இருக்கவும் துணை புரிவீராக. அகங்காரம், உணர்ச்சி ஆகியவற்றின் தாக்குதல்களைத் தாங்கிடவும், தெய்வீக வழிகாட்டுதல் என்னும் ஒளியினைப் பின்பற்றவும் அவர்களுக்கு அருள் புரிவீராக. சக்திமிக்கவரும் அருளாளரும், சுயஜீவியரும், அளிப்பவரும் இரங்குபவரும் எல்லாம் வல்லவரும் சர்வ வள்ளன்மை மிக்கவரும் நீரே ஆவீர்.
- `Abdu'l-Bahá