Return to BahaiPrayers.net
Facebook
பிரபுவே, எனதாண்டவரே, உந்தன் நாமம் போற்றப்டுவமாக! எதன் மூலமாக அந்நேரம் வந்ததோ, மீண்டும் உயிர்த்தெழுதல் நிகழ்ந்ததோ, விண்ணிலும் மண்ணிலுமுள்ளோர் யாவரையும் பயமும் நடுக்கமும் பற்றிக் கொண்டதோ, அந்த உமது திருநாமத்தின் பெயரால், உம்பால் திரும்பியும், உமது சமயத்திற்கு உதவிட்ட உமது
ஊழியர்களின் இதயங்களைப் பரவசமடையக்-கூடியவை எவையோ அவற்றை, உமது இரக்கம் எனும் சுவர்க்கத்திலிருந்தும், உமது மென் கருணையெனும் மேகங்களிளிருந்தும், பொழிந்தருளுமாறு உம்மைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.
என் பிரபுவே, உமது ஊழியர்களையும், உமது பணிப்பெண்களையும் பயனற்ற எண்ணங்கள், வீண் கற்பனைகள் என்னும் ஏவு கணைகளிலிருந்து பாதுகாத்து, உமது அருள் என்னும் கரங்களிலிருந்து மென்மையாக வழிந்திடும் உமது அறிவெனும் நீரினைப் பருகச் செய்வீராக.
நீர், உண்மையாகவே, எல்லாம் வல்லவர், அதி மேன்மைப்படுத்தப்பட்டவர், என்றும் மன்னித்-தருள்பவர், அதி கருணையாளர்.
- Bahá'u'lláh