Return to BahaiPrayers.net
Facebook
கடவுளே, என் கடவுளே! நான் உமது அன்பெனும் கயிற்றினை இறுகப் பற்றி, என்னை உமது பொறுப்பிலும் பாதுகாப்பிலும் முழுமையாக ஒப்படைத்து, என் இல்லம் நீங்கி வெளியில் செல்கிறேன். சொற்கேளாத, கட்டுமீறித்தனமாய் நடந்திடும் முரண்பாடுடைய கொடியோனிட-மிருந்தும், உம்மிலிருந்து வெகுதூரம் விலகித் திசை தவறிப் போன தீங்கிழைப்போரிடமிருந்தும் உமது நேசர்களை, உமது வள்ளன்மையினாலும் கிருபையினாலும் பாதுகாக்குமாறு பரிந்து கேட்கின்றேன். பிறகு என் இல்லம் திரும்பவும் உமது ஆற்றலாலும் வலிமையாலும் எனக்குச் சக்தியளிப்பீராக. உண்மையாகவே, நீரே, எல்லாம் வல்லவர், ஆபத்தில் உதவுபவர், சுயஜீவியானவர்.
- Bahá'u'lláh