Return to BahaiPrayers.net
Facebook
மேன்மையான, அதி உயரிய, அதி விழுமிய அவரது திருநாமத்தின் பேரால்!
பிரபுவே, எனதாண்டவரே நீர் போற்றப்படுவீராக! எனது கடவுளும், எனது பிரபுவும், எனது ஆண்டவரும், எனது ஆதரவும், எனது நம்பிக்கையும், எனது புகலிடமும், எனது ஒளியும் ஆனவரே. மறைவாயுள்ள, மதிப்பிற்குரிய உம் ஒருவரை அல்லாது வேறெவருமே அறிந்திராத உமது திருநாமத்தின் பேரால், இந் நிருபத்தினை ஏந்தி வருபவரை ஒவ்வொரு பேரிடரிலிருந்தும் கொள்ளை நோயிலிருந்தும், கொடிய ஆண், பெண் ஒவ்வொருவரிடமிருந்தும், தீமையிழைப் போனின் தீங்கிலிருந்தும், சமய நம்பிக்கை அற்றோரின் சூழ்ச்சியிலிருந்தும் பாதுகாக்குமாறு உம்மிடம் கேட்டுக் கொள்கின்றேன். மேலும், அனைத்துப் பொருள்களின் மீதுமான அதிகாரத்தினை உமது கையில் வைத்துள்ள என் இறைவா, ஒவ்வொரு நோவிலிருந்தும் மன வேதனையிலிருந்தும், அவரைப் பாதுகாப்பீராக. உண்மையிலேயே, நீரே, பொருள்கள் அனைத்தின் மீதும் சக்தி கொண்டுள்ளவர். நீர் திருவுளங் கொண்டதற்கேற்ப ஆணையிடுகின்றீர்; விரும்பியவாறு விதித்திடுகின்றீர்.
மன்னருக்கெல்லாம் மன்னரே! அன்புள்ள பிரபுவே! புராதன அழகிற்கும் அருளுக்கும், தயாளத்திற்கும் ஈகைக்கும், ஊற்றாகியவரே! நோய்களைக் குணப்படுத்துபவரே! தேவை-களுக்குப் போதுமானவரே! ஒளிக்கெல்லாம் ஒளியானவரே! ஒளிக்கெல்லாம் மேலான ஒளியானவரே! ஒவ்வோர் அவதாரத்தையும் வெளிப்படுத்துபவரே! இரக்கக் குணமுடையவரே! கருணை மிக்கவரே!
அருளாளரே, வள்ளன்மை மிக்கவரே, உமது அதிமிகு கருணை, அபரிமிதமான அருள் ஆகியவற்றின் மூலமாக இந் நிருபத்தினை ஏந்தி வருபவரிடம் கருணை காட்டுவீராக! மேலும், உமது பாதுகாப்பின் வாயிலாக, அவரது உள்ளமும் மனமும் அருவருப்புக் கொண்டிடும் யாவற்றிலிருந்தும் அவரைக் காத்தருள்வீராக. சக்தி அளிக்கப்பட்டோரிடையே, நீர், மெய்யாகவே, அதி சக்தி வாய்ந்தவர்.
உதித்திடும் கதிரவனே, இறைவனின் ஒளி உம் மீது இலயித்திடுமாக! தம்மைத் தவிர கடவுள் வேறெவருமிலர் என எல்லாம் வல்ல, அதி அன்பான, ஆண்டவனே தம்மைக் குறித்து அளித்திட்ட அத்தாட்சிக்கு, நீர் சாட்சியம் அளிப்பீராக.
- Bahá'u'lláh