Return to BahaiPrayers.net
Facebook
என் பிரபுவே, தாய்நூலில் வரையப்பட்டுள்ள, உமது மதிப்பின்படி எங்களுக்கு மிகச் சிறந்ததெனக் கருதப்படுவதை, எனக்கும், உம்மீது நம்பிக்கைக் கொண்டோருக்கும் விதித்திடுவீராக; ஏனெனில், அனைத்துப் பொருள்களின் முன்னரே விதிக்கப்பட்ட அளவுகளை உந்தன் கரத்தின் பிடிக்குள் நீர் வைத்துள்ளீர்.
உமது அன்பை நெஞ்சார வைத்திருப்போரின் மீது உமது நேர்த்தியான பரிசுகள் இடைவிடாது பொழியப்படுகின்றன; உமது தெய்வீக ஒற்றுமையை உணர்ந்தோரின் மீது, உந்தன் விண்ணுலக அருட்கொடைகளின் அற்புதச் சின்னங்கள் தாராளமாக வழங்கப்படுகின்றன. எங்களுக்கென நீர் விதித்துள்ள அனைத்தையும் நாங்கள் உந்தன் பாதுகாப்பில் வைக்கின்றோம்; உமது அறிவு தழுவிடும் எல்லா நன்மைகளையும் எங்களுக்குத் தந்தருளுமாறு உம்மிடம் மன்றாடுகிறோம்.
என் பிரபுவே, சகலத்தையும் அறிந்திடும் உமது சக்தி உணரக்கூடிய எல்லாத் தீமைகளிலிருந்தும் எங்களைப் பாதுகாப்பீராக; ஏனெனில், உம்முள் உள்ளவற்றை அன்றி வேறெந்த சக்தியோ பலமோ இல்லை; உமது முன்னிலையிலிருந்து வரும் வெற்றி அல்லாது வேறெதுவும் வரப்போவதில்லை; மேலும் ஆணையிடுவதற்கான அதிகாரம் உம் ஒருவருக்கே உரியது. இறைவன் விரும்பிய அனைத்தும் நிகழ்ந்துள்ளன, அவர் விரும்பாத எதுவும் நிகழப்போவதில்லை.
அதி உயர்வான, அதி வல்லமைமிக்கவரான கடவுளில் அன்றி வேறு சக்தியோ பலமோ இல்லை.
- The Báb