Return to BahaiPrayers.net
Facebook
கடவுளே, ஒளி உமக்கே உரியதாகட்டும்! பொருள்கள் அனைத்திற்கும் முன்பாக இருந்துள்ளவரும், பொருள்கள் அனைத்திற்குப் பிறகும், பொருள்கள் அனைத்திற்கு அப்பாலும் நிலைத்திருக்கக் கூடிய கடவுள் நீரே ஆவீர். எல்லாப் பொருள்களையும் அறிந்து, எல்லாப் பொருள்களுக்கும் உச்சவுயர்வாக இருக்கும் கடவுள் நீரே ஆவீர். எல்லாப் பொருள்களையும் இரக்கத்தோடு கையாள்பவரும், எல்லாப் பொருள்களுக்கிடையே தீர்ப்பளிப்பவரும், எல்லாப் பொருள்களையும் உந்தன் அகக் காட்சியால் தழுவிடும் கடவுள் நீரே ஆவீர். என் பிரபு, நீரே கடவுள்; என் நிலையை நீர் அறிவீர்; எனது அக, புற ஜீவனை நீர் காண்கின்றீர்.
உந்தன் அழைப்புக் குரலுக்குப் பதிலளித்திட்ட எனக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் உமது மன்னிப்பை அருள்வீராக. என் மீது துக்கம் விளைவிக்க விரும்பும், அல்லது எனக்குக் கெடுதல் நேரட்டும் என ஆவலுறும் எவரொருவரின் தீங்கினையும் எதிர்த்திடும் எனது நிறைவான உதவியாளராக நீர் ஆகிடுவீராக. மெய்யாகவே, எல்லாப் படைப்புப் பொருள்களுக்கும் பிரபு நீரே ஆவீர். அனைவருக்கும் நீரே நிறைவளிக்கின்றீர், ஆனால் எவருமே உம்மையன்றி தன்னிறைவாக இருந்திடவியலாது.
- The Báb