Return to BahaiPrayers.net
Facebook
கடவுளே, என் கடவுளே! உமது நம்பிக்கைக்குப் பாத்திரமான ஊழியர்களைத் தானெனுந் தன்மை, மனவெழுச்சி ஆகிய தீமைகளிலிருந்து பாதுகாப்பீராக; உமது அன்புக் கருணையெனும் கவனமிக்கக் கண்களைக் கொண்டு குரோதம், வெறுப்பு, பொறாமை ஆகியவற்றிலிருந்து அவர்களைப் பாதுகாத்து, உமது கண்காணிப்பு எனும் தகர்க்கவியலாத கோட்டையினுள் அவர்களுக்குப் புகலிடமளிப்பீராக; ஐயமெனும் அம்புகளிலிருந்து அவர்களைக் காத்து உமது ஒளிமிக்க அடையாளங்களின் வெளிப்பாடுகளாக ஆக்குவீராக; உமது தெய்வீக ஒற்றுமை என்னும் பகலூற்றிலிருந்து பாய்ந்திடும் பிரகாசமிக்க கதிர்களைக் கொண்டு அவர்களின் வதனங்களை ஒளிபெறச் செய்வீராக; உமது இராஜ்யத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்ட பாசுரங்களைக் கொண்டு அவர்களின் உள்ளங்களைக் களிக்கச் செய்வீராக; உமது ஒளி என்னும் அரசிலிருந்து வந்திடும் அனைத்தையும் ஆட்சிபுரிந்திடும் உமது சக்தியினைக் கொண்டு அவர்களின் இடைகளை வலுப்பெறச் செய்வீராக. சர்வ வல்லமை உடையவரும், பாதுகாப்பவரும், எல்லாம் வல்லவரும், கிருபையாளரும் நீரே ஆவீர்.
- `Abdu'l-Bahá