Return to BahaiPrayers.net
Facebook
என் பிரபுவே! மனிதர்கள் வேதனைகளாலும் பேரிடர்களாலும் சுற்றி வளைக்கப்பட்டிருப்-பதையும் இன்னல்களாலும் துன்பங்களாலும் சூழப்பட்டிருப்பதையும் நீர் அறிவீர்.
ஒவ்வொரு சோதனையும் மனிதனைத் தாக்குகின்றது, ஒவ்வொரு துரதிர்ஷ்டமும் அவனை ஓர் அரவத்தின் தாக்குதலைப் போல் சாடுகின்றது. உமது பாதுகாப்பு, பராமரிப்பு, காவல், கவனிப்பு என்னும் இறக்கையின் கீழல்லாது அவனுக்குத் தஞ்சமோ புகலிடமோ கிடையாது.
கருணை மிக்கவரே! என் பிரபுவே! உமது பாதுகாப்பை என் கவசமாகவும், உமது பராமரிப்பை என் கேடயமாகவும், உமது ஒருமை என்னும் வாயிலில் பணிவை என் காவலாகவும், உமது கவனிப்பையும் ஆதரவையும் என் அரணாகவும் உறைவிடமாகவும் ஆக்குவீராக. எனது தான் எனுந் தன்மை, ஆசை ஆகியவற்றின் தூண்டுதல்- களிலிருந்து என்னைப் பாதுகாத்து, என்னை ஒவ்வொரு நோயிலிருந்தும், சோதனையி-லிருந்தும், இடர்ப்பாடிலிருந்தும், கடும் பரீட்சையிலிருந்தும் காத்திடுவீராக.
மெய்யாகவே, காப்பவரும், பாதுகாவலரும், பராமரிப்பவரும், நிறைவளிப்பவரும் நீரே; மெய்யாகவே, நீரே கருணையாளரிலேயே அதிகருணையாளர்.
- `Abdu'l-Bahá