Return to BahaiPrayers.net
Facebook
இரக்கமும் அன்பும் நிறைந்த ஆண்டவனே! கடலின் முடிவில்லா அலைகளைப்போல கிழக்கு அசைவுற்றுள்ளது, மேற்கு அலை பாய்கின்றது. புனிதமெனும் மெல்லிய இளங்காற்று பரவியுள்ளது, காணவியலா இராஜ்யத்தினின்று, உண்மைச் சூரியனின் கதிர்கள் பிரகாசமாக ஒளிவீசுகின்றன. தெய்வீக ஒற்றுமையின் கீர்த்தனைகள் பாடப்படுகின்றன, விண்ணுலக வலிமையின் பதாகைகள் காற்றில் அசைகின்றன. தேவைதைப்போன்ற குரல் எழுப்பப்பட்டு, அது, பெருங்கடல் விலங்கின் கர்ஜனையைப்போன்று, சுயநலமின்மை, நிலையற்றத் தன்மை ஆகியவற்றுக்கான அழைப்பொலியை எழுப்பியுள்ளது. யா பஹாவுல்-அப்ஹா எனும் வெற்றிக்குரல் எல்லாத் திசைகளிலிருந்தும் எதிரொலிக்கின்றன; யா அளியுள்-அலா எனும் அழைப்புக் குரல் எல்லாப் பிரதேசங்களிலும் ஒலிக்கின்றது. இதயங்களை கவருகின்ற ஒருவரின் பேரொளியைத் தவிர இவ்வுலகில் வேறெந்த பரபரப்பும் இல்லை; நிகரற்றவரும், நல்லன்பருமாகிய அவருக்காப்க பொங்கி எழுகின்ற அன்பைத் தவிர வேறெந்த கழகமும் இல்லை.
ஆண்டவனின் அன்புக்குரியவர்கள், தங்கள் கஸ்தூரி மணம் கமழும் சுவாசத்தோடும், எல்லா வெப்ப சூழல்களிலும், பிரகாசமான மெழுகுவத்திகளைப் போல எரிகின்றனர்; சகல இரக்கமுடையவரின் அன்பர்கள், இதழ் விரியும் மலர்களைப் போல, எல்லாத் தேசங்களிலும் காணப்படுகின்றனர். ஒரு கணநேரமும் அவர்கள் ஓய்வெடுத்ததில்லை; உம்மை நினைப்பதில் அல்லாது அவர்கள் சுவாசிப்பதில்லை; உமது சமயத்திற்குச் சேவையாற்றுவதைத் தவிர அவர்கள் வேறெதற்கும் யாசித்ததில்லை.
உண்மை எனும் புல்வெளியில் அவர்கள் இனிய கீதம் பாடிடும் இராப்பாடிகள் ஆவர்; வழிகாட்டல் எனும் பூங்காவில் அவர்கள் பிரகாசமான வர்ணங்கள் கொண்ட மலர்களைப்போல் ஆவர். மெய்ம்மை எனும் இறைப்பூங்காவின் நடைப்-பாதைகளை அவர்கள் மர்ம மலர்களைக் கொண்டு அலங்கரித்துள்ளனர்; அசையும் ஊசி இலை மரங்களைப்போல் அவர்கள் தெய்வீக விருப்பம் எனும் நதிக்கரைகளில் வரிசையாக நிற்கின்றனர். உயிருரு எனும் தொடுவானத்தின் மேல் அவர்கள் பிரகாசமான நட்சத்திரங்களாக ஒளிவீசுகின்றனர்; உலகின் வானத்தின் மீது அவர்கள் ஜொலிக்கும் மண்டலங்களாக ஒளிர்கின்றனர். அவர்கள் விண்ணுலகக் கிருபையின் அவதாரங்கள் ஆவர்; தெய்வீக உதவி எனும் ஒளியின் பகலூற்றுகள் ஆவர்.
அன்பான பிரபுவே, அனைவரும் திடமாகவும் உறுதியாகவும் இருப்பதற்கும், நித்திய பேரொளியால் பிரகாசிக்கவும் அவர்களுக்கு அருள்புரிவீராக. அதனால், ஒவ்வொரு சுவாசித்தலிலும், உமது அன்புக் கருணை எனும் உறைவிடத்திலிருந்து மென்மையான இளங்-காற்றுகள் வீசிடக் கூடுமாக; அதனால் உமது கிருபை எனும் சமுத்திரத்திலிருந்து ஒரு மூடுபனி தோன்றிடக்கூடுமாக; உமது அன்பென்னும் கனிவான சாரல்கள் பசுமையை வழங்கக் கூடுமாக; தெய்வீக ஒற்றுமை எனும் ரோஜா தோட்டத்-திலிருந்து மென் காற்று அதன் நறுமணத்தை மிதந்துச் செல்லச் செய்யட்டுமாக.
உலகின் அதி நேசரே, உந்தன் பேரொளியிளிருந்து ஒளிக்கதிர் ஒன்றைத் தந்தருல்வீராக. மனுக்குலத்தின் நன்நேேசரே, உமது திரு- வதனத்தின் ஒளியை எங்கள் மீது பொழிந்திடுவீராக.
சர்வ வல்லமை பொருந்திய இறைவனே, எங்களைப் பாதுகாத்து எங்களின் புகலிடமாக ஆகிடுவீராக; உமது வலிமையையும் அரசாட்சியையும் வெளிப்படுத்திடுவீராக.
அன்பான பிரபுவே, தேச துரோகம் இழைத்திடுவோர் சில மாநிலங்களில் இயங்கியும் செயல்பட்டும் வருகின்றனர்; அல்லும் பகலும் அவர்கள் கொடியதோர் தவறை விளைவிக்கின்றனர்.
ஓநாய்களைப் போல, தாக்குவதற்காகக் கொடுங்கோலர்கள் பதுங்கி நிற்கின்றனர்; தவறிழைக்கப்பட்ட, குற்றமற்ற மந்தைகளுக்கு ஆதரவோ, அடைக்கலாமோ இல்லை. தெய்வீக ஒற்றுமை எனும் புல்வெளிகளில் உள்ள மான்களை வேட்டை நாய்கள் பின்தொடர்கின்றன; விண்ணுலக வழிகாட்டல் எனும் மலைகளின் மீதுள்ள வண்ணக் கோழிகளைப் பொறாமை எனும் காகங்கள் துரத்துகின்றன.
தெய்வீக பாதுகாப்பளிப்பவரே, எங்களைப் பேணிகாத்து பாதுகாப்பீராக! எங்கள் கேடயமானவரே, எங்களை காப்பாற்றி, எங்களைத் தற்காப்பீராக! உமது உறைவிடத்தின் கீழ் எங்களை வைப்பீராக; உமது உதவியைக் கொண்டு எல்லா நோய்களிலிருந்தும் எங்களைக் காப்பீராக. மெய்யாகவே, உண்மையானப் காப்பாளரும், கண்ணுக்குப் புலப்படா பாதுகாவலரும், விண்ணுலக காத்தருள்பவரும், அன்பான விண்ணுலகப் பிரபுவும் நீரே ஆவீர்.
- `Abdu'l-Bahá