Return to BahaiPrayers.net
Facebook
துன்பத்திலிருந்து விடுபட விரும்புவீராயின், சர்வ கருணைமிக்கவரின் எழுதுகோலினால் வெளிப்படுத்தப்-பட்டுள்ள இப்பிரார்த்தனையைக் கூறுவீராக:
கடவுளே, என் கடவுளே! உமது ஒற்றுமைக்கும் உமது ஒருமைக்கும் நான் சாட்சியமளிக்கின்றேன். நாமங்களின் உடைமையாளரும் விண்ணுலகங்- களின் அமைப்பாளருமானவரே, உமது மேன்மைமிகு திருவாக்கினுடைய ஊடுருவும் செல்வாக்கு, மற்றும் உமது அதிவிழுமிய எழுதுகோல் சக்தியின் மூலமாக, உமது சக்தி மற்றும் வலிமை எனும் அடையாளங்களைக் கொண்டு எனக்கு உதவி புரியுமாறும், உமது ஒப்பந்தம், உமது சாசனம் ஆகியவற்றை மீறியுள்ள உந்தன் எதிரிகளின் விஷமங்களிலிருந்து என்னைப் பாதுகாப்பீராக. மெய்யாகவே, சர்வவல்லவரும், அதி சக்திமிக்கவரும் நீரே ஆவீர்.
இப்பிரார்த்தனை, தகர்க்கவியலா வலிமைமிகு அரணும், வென்றிடவியலா படையுமாகும். அது பாதுகாப்பை வழங்கி விடுதலையை உறுதி செய்கின்றது.
- Bahá'u'lláh