Return to BahaiPrayers.net
Facebook
பிரபுவே, எனதாண்டவரே, உமது நாமம் மேன்மைப்படுத்தப்படுமாக. சகல பொருள்-களாலும் பூஜிக்கப்படுபவரும் எந்த ஒருவரையும் வணங்காதவரும் நீரே! Êசகல பொருள்களின் பிரபுவும் அவரே: எவருக்குமே அடிமையாகாதவரும் அவரே; சகலத்தையும் அறிந்தவரும் எதனாலும் அறியப்படாதவரும் நீரே! மனிதர்பால் உம்மைத் தெரிவித்துக் கொள்ள நீர் விரும்பினீர்; ஆதலின், நீர் உமது திருவாயின் ஒரே சொல்லின் மூலமாகப் படைப்பினத்தைத் தோற்றுவித்துப் பிரபஞ்சத்- தினையும் உருவாக்கினீர். உருவாக்குபவரும், படைப்பவரும், எல்லாம் வல்லவரும், அதி சக்தி வாய்ந்தவருமான இறைவன் உம்மையன்றி வேறிலர்.
உமது விருப்பம் என்னும் தொடுவானத்திற்கு மேல் ஒளிர்ந்துள்ள இதே சொல்லின் வழி உமது தேர்ந்தெடுக்கப்பட்டோரின் இதயங்களை உயிரூட்டி, உம்மை நேசிப்போரின் ஆன்மாக்களைத் துடிப்புறச் செய்த ஜீவ நீரினைப் பருகிடுவதற்கு எனக்கு உதவுமாறு உம்மை வேண்டிக் கேட்கின்றேன். அதனால், எல்லாக் காலங்களிலும் எல்லாச் சூழ்நிலைகளிலும் என் முகத்தினை உந்தன்பால் திருப்பிடக் கூடும்.
சக்தியும் மகிமையும் வள்ளன்மையும் மிக்க இறைவன் நீரே. அதி உயரிய ஆட்சியாளரும் சர்வ மகிமை வாய்ந்தவரும் எல்லாமறிந்தவருமான இறைவன் உம்மையன்றி வேறிலர்.
- Bahá'u'lláh