Return to BahaiPrayers.net
Facebook
என் பிரபுவே, என் கடவுளே! நீர் மேன்மைப் படுத்தப்படுவீராக. உமது அவதாரமானவரை ஏற்றுக் கொள்ள எனக்கு உதவியமைக்காகவும் உமது பகைவர்களிடமிருந்து என்னை வேறாக்கியதற்காகவும் உமது நாள்களில் அவர்களின் தவறுகளையும் தீயச் செயல்களையும் எனது கண்களுக்கு முன்னால் காட்டியமைக்காகவும் அவர்களிடமிருந்து எல்லா தொடர்புகளையும் நீக்கியதற் காகவும் உமது கிருபை உமது வள்ளன்மைமிகு அருள்பாலிப்புகள் ஆகியவற்றின் மீது என்னை முழுமையாகத் திரும்பச் செய்தமைக்காகவும் உமக்கு நன்றி கூறுகின்றேன். மேலும் உமது விருப்பம் என்னும் மேகங்களிலிருந்து என்மீது நீர் அனுப்பியருளியவற்றின் பயனாகச் சமய நம்பிக்கையற்றோரின் கூற்றுகளிலிருந்தும் தவறான நம்பிக்கைக் கொண்டோரின் மறைகுறிப்புகளிலிருந்தும் நான் புனிதப்படுத்தப்- பட்டிருந்ததன் காரணமாக உந்தன் மீது என் இதயத்தை உறுதியாகப் பதிக்கவும் உமது வதனத்தின் ஒளியினை மறுத்தவர்களிடமிருந்து என்னால் விலகி ஓட முடிந்தமைக்காகவும் நான் உமக்கு நன்றி கூறுகின்றேன். உமது அன்பில் நான் உறுதியாக இருந்திட எனக்குச் சக்தியளித்-தமைக்காகவும் உமது புகழை எடுத்துரைக்கவும் உமது பண்புகளைப் புகழ்ந்திடவும் கண்ணுக்குப் புலனாகும் புலனாகா அனைத்துப் பொருள்களையும் விஞ்சிடும் உமது கருணை என்னும் கோப்பையிலிருந்து என்னைப் பருகிடச் செய்தமைக்காகவும் மீண்டும் நான் உமக்கு நன்றி கூறுகின்றேன்.
எல்லாம் வல்லவரும், அதி மேன்மை மிக்கவரும், ஒளிமயமானவரும், அன்பே உருவானவரும் நீரே!
- Bahá'u'lláh