Return to BahaiPrayers.net
Facebook
எந்தன் இறைவா, எல்லா மாட்சிமையும் மகிமையும், எல்லா இராஜ்யமும், ஒளியும் கம்பீரமும் புகழொளியும் உமக்கே உரியதாகுக. நீர் தேர்ந்தெடுத்தவருக்கு இறைமையை வழங்கு-கின்றீர், நீர் விரும்பியவருக்கு அதனைக் கொடுக்க மறுக்கின்றீர். அனைத்தையும் உடைய, அதிவுயர் இறைவன், உம்மையன்றி வேறிலர். பிரபஞ்சத்தையும் அதில் வாழும் அனைத்தையும் வெறுமையிலிருந்து படைப்பவர் நீரே. உமது மதிப்புக்கு உகந்தது உம்மை அல்லாது வேறெதுவும் இல்லை; அதே வேளையில் உமது திருமுன்னிலையில் உம்மைத் தவிர மற்றனைத்தும் விலக்கப்பட்டன போன்றவையும், உமது சொந்த உருவின் மகிமையுடன் ஒப்பிடும்போது வெறுமையானவை போன்றவையாகும்.
“காட்சி எதுவுமே அவரை உள்ளடக்குவதில்லை; ஆனால், அவர், காட்சி அனைத்தையுமே உள்ளடக்குகின்றார்; நுட்பமானவரும் சகலத்தையும் கண்டுணர்பவரும் அவரே ஆவார்” என நீர் உமது முக்கிய நூலில் கூறுவதுபோல், உம்மையே நீர் புகழ்ந்துரைத்தாலல்லாது, யான் உமது பண்புகளைப் பாராட்டுதல் என்பது என் சக்திக்கு மிகவும் அப்பாற்பட்டதாகும். என் இறைவா, ஒளி உமக்கே உரியதாகுக; உண்மையில் எந்த ஒரு மனமோ, காட்சியோ, அது எத்துணை கூரியதாகவோ வேறுபாடு காணக் கூடியதாகவோ இருந்திடினும், உமது அடையாளங்களில் அதி அற்பமான ஒன்றின் தன்மையைக்கூட புரிந்துகொள்ளவியலாது. மெய்யாகவே, நீரே கடவுள், உம்மையன்றி இறைவன் வேறிலர். நீர் தனியராகவே உமது இயல்புகளின் வெளிப்படுத்துதலாவீர்; அதனால் உம்மைத் தவிர வேறெவரின் புகழ்ச்சியுமே உமது புனித அவைக்கு உயரவோ, உம்மைத் தவிர, வேறெவராலும் உமது இயல்புகளை ஆழங் கண்டிடவோ இயலாது என்பதற்கு, நான் சாட்சியம் கூறுகின்றேன்.
ஒளி உமக்கே உரியதாகட்டும். உம் ஒருவரின் வருணனையைத் தவிர வேறெவரின் வருணனைக்கும் மேலாக நீர் உயர்ந்திருக்கின்றீர் என்பதனால் உமது பண்புகளைப் பொருத்தமுற மிகைப்படுத்துவதோ, உமது அதி உள்ளார்ந்த மெய்ம்மையின் சாராம்சத்தினைப் புரிந்து கொள்வதோ மானிட கருத்துக்கு மிகவும் அப்பாற்பட்டதாகும். என் இறைவா, நீர் உம்மை என்னிடம் வெளிப்படுத்திக் கொண்டதன் காரணத்தினால்தான் நான் உம்மை அறிந்து கொண்டுள்ளேன்; நீர் உம்மை எனக்கு வெளிப்படுத்தியிருக்காவிடில், நான் உம்மை அறிந்திருக்கவே இயலாது. நீர் என்னை உந்தன்பால் அழைத்ததன் காரணமாகவே, நான் உம்மை வழிபடுகிறேன். உமது அழைப்பு இல்லாதிருந்திருப்பின் நான் உம்மை வழிபட்டிருக்கவே மாட்டேன்.
- The Báb