Return to BahaiPrayers.net
Facebook
உமக்காக ஏங்குவோர் அனைவரின் ஆராதனையின் இலக்காக இருக்கும் வதனத்திற்கு உரியவரே, உமது திருவிருப்பத்- தின்பால் முழுமையான பக்திகொண்டோரின் நம்பிக்கையாக விளங்கும் முன்னிலைக்கு உரியவரே; உமது அரசவையை நெருங்கிய அனைவரின் ஆவலாக இருக்கும் அண்மைக்கு உரியவரே; உமது உண்மையை அறிந்தோரின் தோழனாக இருக்கும் திருவதனத்திற்கு உரியவரே; உமது திருமுகத்தைக் கண்ணுற ஏங்கிடும் ஆன்மாக்களை இயக்கிடும் நாமத்திற்கு உரியவரே; உம்மை நேசிப்போரின் உண்மை வாழ்வாக இருக்கும் குரலுக்கு உரியவரே; விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைவருக்கும் உயிர் நீராக இருக்கின்ற வார்த்தைகளை மொழிந்திடும் வாயுக்கு உரியவரே!
நீர் அநுபவித்த தவற்றினாலும், தீமை இழைத்திடும் சைனியங்கள் உம் மீது சுமத்திய கொடுமைகளினாலும், உம்மை அல்லாது வேறெதனையும் சார்ந்துள்ளவற்றிலிருந்து என்னைப் புனிதப்படுத்தக் கூடியவற்றை, உமது கருணை எனும் மேகங்களிலிருந்து என் மீது பொழிந்திடுமாறு நான் உம்மிடம் வேண்டுகிறேன்; அதனால் நான், உம்மைப் போற்றுவதற்குத் தகுதியுடையவனாகவும், உம்மை நேசிப்பதற்குப் பொருத்தமானவனாகவும் ஆகிடக் கூடும்.
என் பிரபுவே, உம்மைச் சுற்றி வலம் வந்திடும் பணிப்பெண்களுக்கென, உமது அழகெனும் சூரியனின் பேரொளிகளும், உமது வதனத்தின் பிரகாச ஒளிபிம்பங்களும் இடைவிடாது பொழியப்படுகின்றனவே, அவர்களுக்காக நீர் விதித்தருளியவற்றை எனக்கும் தரமறுத்திடாதீர். உம்மை நாடிய எவரொருவருக்கும் நித்திய காலமும் உதவியவரும், உம்மிடம் கேட்போருக்குத் தாராளமாக ஆதரவளித்தவரும் நீரே ஆவீர்.
வலியவரும், என்றும் நிலைத்திருப்பவரும், சர்வ கொடையாளரும், அதி தாராளமானவருமான கடவுள் உம்மைத் தவிர வேறிலர்.
- Bahá'u'lláh