Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே, ஒளி உமக்கே உரியதாகுக! உந்தன் வதனத்தை நோக்கியே என் வதனம் செலுத்தப்பட்டுள்ளது; மெய்யாகவே, உந்தன் வதனமே எனது வதனமாகும், உந்தன் அழைப்பே எனது அழைப்பாகும், உந்தன் திருவெளிப்பாடே எனது திருவெளிப்பாடாகும், உந்தன் உள்ளமையே, எனது உள்ளமையாகும்; உந்தன் சமயமே எனது சமயமாகும், உந்தன் கட்டளையே எனது கட்டளையாகும், உந்தன் உயிருருவே எனது உயிருருவாகும், உந்தன் மாட்சிமையே, எனது மாட்சிமையாகும், உந்தன் புகழொளியே எனது புகழொளியாகும், உந்தன் சக்தியே, எனது சக்தியாகும்.
உந்தன் கற்புடைமை எனும் கூடாரத்தினுள் உமது பணிப்பெண்களைப் பாதுகாத்து, உந்தன் நாள்களுக்குத் தகுதியற்றவையான அவர்களின் செயல்களை இரத்து செய்யுமாறு, நாடுகளின் அமைப்பாளரும், நித்தியத்தின் மன்னருமாகிய உம்மிடம் நான் மன்றாடுகிறேன். எனவே, என் கடவுளே, அவர்களிடமிருந்து எல்லா சந்தேகங்-களையும், வீண் கற்பனைகளையும் அகற்றி; நாமங்களின் பிரபுவும், வாய்ச்சொல்லின் மூலமுமானவரே, உம்முடனான அவர்களின் உறவுக்குப் பொருந்தாத அனைத்திலிருந்தும் அவர்களைப் புனிதப்படுத்துவீராக. படைப்பு முழுவதன் அதிகாரத்தை உந்தன் கைப்பிடிக்குள் வைத்திருப்பவர் நீரே ஆவீர்.
சர்வ வல்லவரும், அதி மேலானவரும், சர்வ ஒளிமயமானவரும், சுய ஜீவியருமான கடவுள் உம்மைத் தவிர வேறிலர்.
- Bahá'u'lláh