Return to BahaiPrayers.net
Facebook
பிரபுவே, எனதாண்டவரே, உந்தன் நாமம் மேன்மைப்படுத்தப்படுமாக!
உமது கருணையின் அற்புதங்களைப் பார்த்திட என் கண்கள் எதிர்பார்த்திருப்பதையும், உமது இனிய கீதங்களைச் செவிமடுக்க என் செவிகள் ஏங்கிக் கொண்டிருப்பதையும், உமது அறிவெனும் உயிர் நீர்களுக்காக என் இதயம் ஆவல்கொண்டிருப்பதையும் காண்பீராக. என் கடவுளே, உமது பணிப்பெண், உந்தன் கருணை எனும் வாசஸ்தலத்தின் முன் நின்று- கொண்டிருப்பதையும், மற்றெல்லா நாமங்களுக்கும் மேலானதாகத் தேர்ந்தெடுத்து, நீர் விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்திற்கும் மேலாக அமைத்துள்ள, உந்தன் நாமத்தைக் கொண்டு உம்மை அழைப்பதையும், நீர் காண்கின்றீர். உமது கருணை எனும் சுவாசங்களை அவள் மீது பொழிந்திடுவீராக; அதனால் அவள், பரவசத்தால் தன்னிடமிருந்தே முழுமையாக விலகிச் சென்றும், உமது வதனத்தின் ஒளியால் பிரகாசித்தும், உந்தன் அரசாட்சியின் கதிரொளியைத் திசையெங்கும் பொழிந்தும், உந்தன் அரியாசனத்தின் மீது ஸ்தாபித்துமுள்ள, அந்த இருக்கையை நோக்கி முழுமையாக ஈர்க்கப்படக்கூடும்.
என் பிரபுவே, உம்மை நாடிவந்தோரை வெளியேற்றி விடாதீர் எனவும், உம்மை நோக்கி அவர்களின் காலடிகளை எடுத்துவைத்தோரைத் துரத்தி விடாதீர் எனவும், உம்மை நேசிப்போர் அனைவரையும் உமது கிருபையை இழக்கச் செய்திடாதீர் எனவும், நான் உம்மிடம் கெஞ்சிக் கேட்கிறேன். என் பிரபுவே, அதி பரிவுடையவரான, கருணைக் கடவுள் என உம்மையே அழைத்துக்கொண்டவர் நீரே ஆவீர். ஆதலால், உமது புகலிடத்தை நாடி வந்துள்ள, உம்மை நோக்கித் தனது முகத்தைத் திருப்பியுமுள்ள உமது பணிப்பெண்ணின் மீது இரக்கங் காட்டுவீராக.
மெய்யாகவே, என்றென்றும் மன்னிப்பவரும், அதி கருணையாளரும் நீரே ஆவீர்.
- Bahá'u'lláh