Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே, ஒளி உமக்கே உரியதாகுக! உம் மீதும் உமது அடையாளங்களின் மீதும் நம்பிக்கைக் கொண்டுள்ள உமது பணிப்பெண்களுள் ஒருத்தி, உமது ஒருமைத்தன்மை எனும் விருட்சத்தின் நிழலின் கீழ் நுழைந்துள்ளாள். என் கடவுளே, தெளிவானதும் மறைவானதுமான உமது நாமத்தின் பேரில், அவளைத் உமது தேர்வுச் செய்யப்பட்ட நனிசிறந்த மதுரசத்தினைப் பருகச் செய்வீராக. அதனால் அது அவள் தன்னையே மறக்கச் செய்தும், உமது நினைவிலேயே அவள் தன்னை முழுமையாகப் பக்திகொள்ளவும், உம்மைத் தவிர வேறெவரிடமிருந்தும் முற்றிலும் பற்றற்-றிருக்கவும் கூடும்.
என் பிரபுவே, உம்மைப் பற்றிய அறிவை இப்போது நீர் அவளிடம் வெளிப்படுத்தியுள்ளதால், உமது அருட்கொடையினால், உமது கிருபையை அவளுக்குத் தரமறுத்திடாதீர்; இப்போது அவளை உம்மிடமே நீர் அழைத்துள்ளதால், உமது தயையின் வாயிலாக, உம்மிடமிருந்து அவளைத் துரத்தி விடாதீர். ஆதலால், உமது உலகினில் காணப்படும் அனைத்தையும் விடச் சிறந்தவற்றை அவளுக்குத் தந்தருள்வீராக. மெய்யாகவே, அதி வள்ளன்மை-யாளரும், மகத்தான கிருபையாளரும் நீரே ஆவீர்.
மண்ணுலகு விண்ணுலகு ஆகிய இராஜ்யங்களுக்குச் சமமானவற்றைத் உந்தன் உயிரினங்கள் ஒன்றுக்கு நீர் தந்தருளியபோதும், அது உந்தன் அரசாட்சியின் பிரம்மாண்டமான அளவிலிருந்து ஓர் அணுவைக் கூடக் குறைத்திடவியலாது. மாபெரும் திருவுரு என மனிதர்கள் உம்மை அழைத்திட விரும்பும் ஒருவரை விடத் நீர் மிக மிக மகத்தானவர். ஏனெனில், அத்தகைய பட்டப் பெயர் என்பதோ, உந்தன் திருவிருப்பத்தின் சாதாரண குறிப்பினால் உருவாக்கப்பட்ட உமது அனைத்து நாமங்களுள் ஒன்றாகும்.
சக்திமிக்கக் கடவுளும், ஒளிமிக்கக் கடவுளும், அறிவும் விவேகமுமிக்கக் கடவுளுமாகிய உம்மைத் தவிர வேறு கடவுள் இலர்.
- Bahá'u'lláh