Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே, உம்மை மறுத்து விலகிய உமது உயிரினங்கள் இழைத்திட்ட தவறுகள், எவருள் உமது தெய்வத்தன்மை அவதரித்துள்ளதோ அவருக்கும், உமது ஊழியர்களுக்கும் இடையே எவ்வாறு தடையை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீர் காண்கின்றீர். என் பிரபுவே, ஒருவர் மற்றவரின் நலன்களில் மும்முரமாக ஈடுப்பட செய்திடக்-கூடியவற்றை அவர்களிடம் அனுப்பிடுவீராக. அதனால், அவர்களின் வன்செயல் அவர்களின் எல்லைக்குட்பட்டதாக இருந்திடவும், அவர்கள் வாழும் நாடு அமைதியை காணவும் செய்திடுவீராக.
என் பிரபுவே, உமது பணிப்பெண்களுள் ஒருத்தி, உமது வதனத்தை நாடி, உமது மகிழ்ச்சி எனும் பரவெளியில் உயரப்பறந்துள்ளாள். என் பிரபுவே, உமது பணிப்பெண்லாகத் தேர்ந்தெடுக்கப்-பட்டோருக்கு நீர் விதித்தருளியவற்றை அவளுக்குத் தரமறுத்திடாதீர். ஆகையால், உமது வார்த்ததைகளின்பால் ஈர்த்திட அவளை இயலச் செய்திடுவீராக, அதனால் அவள் அவர்கள் மத்தியில் உமது புகழைப் பாடக்கூடும்.
நீர் விரும்பியதைச் செய்வதற்குச் சக்தி-யுடையவர் நீரே. சர்வ வல்லவரும், மனிதர் அனைவராலும் உதவிக்கு நாடப்படுபவருமான, உம்மைத் தவிர வேறு கடவுள் இலர்
- Bahá'u'lláh