Return to BahaiPrayers.net
Facebook
என் பிரபுவே, என் நேசரே, எனதாவலே! என் தனிமையில் என்னை நேசிப்பீராக; என் நாடுகடத்தலில் என்னுடனிருப்பீராக. எனது துயரத்தைப் போக்குவீராக. உமது அழகின்பால் என்னைப் பக்தி கொள்ளச் செய்வீராக. உம்மைத் தவிர மற்றெல்லாவற்றிலும் இருந்தும் என்னைப் பின்வாங்கச் செய்வீராக. உமது புனிதம் என்னும் நறுமணங்களின் மூலம் என்னை ஈர்த்திடுவீராக. உமது இராஜ்யத்தில் வாழும் உம்மைத் தவிர மற்றனைத்திலிருந்தும் தொடர்பறுத்-திட்டோருடனும், உமது புனித வாயிலுக்குச் சேவையாற்ற ஏங்குவோருடனும், உமது சமயத்தில் பணியாற்றிட விரும்புவோருடனும் என்னைத் தொடர்பு கொள்ளச் செய்வீராக. உமது நல்விருப்பத்தினை அடைந்திட்டப் பணிப்-பெண்களுள் ஒருத்தியாக என்னை ஆக்கிடுவீராக. மெய்யாகவே, அருளாளரும், ஈகைக் குணமுடையவரும் நீரே.
- `Abdu'l-Bahá