Return to BahaiPrayers.net
Facebook
என் இறைவா, நாள்களுக்கெல்லாம் அரசனான அந் நாளினை, உமது தேர்ந்தெடுக்கப்-பட்டோருக்கும் உமது அவதாரங்களுக்கும் நீர், உமது அதி சிறந்த நிருபங்களில் அறிவித்த நாளான, அந் நாளினை, உமது படைப்புப் பொருள்கள் அனைத்தின் மீதும் உமது அனைத்து நாமங்கள் ஒளியின் பிரகாசத்தினைப் பொழிந்த நாளான, அந் நாளினை, நீர் வெளிப்படுத்தியமைக்காக உமது நாமம் போற்றப்படுமாக. எவரொருவர் உந்தன்பால் திரும்பி, உமது முன்னிலையை அடைந்து, உமது குரலின் தொனிகளைக் கண்டு கொள்கின்றாரோ, அவரது ஆசீர்வாதம் மிகுதியானதாகும்.
உமது திருவாக்கினை உமது ஊழியர்களிடையே மேன்மைப்படுத்திடவும், உமது படைப்பினங்களின் மத்தியில் உமது புகழினைப் பறைசாற்றிடவும் நீர் உமக்கு விருப்பமானவர்களை அருள்கூர்ந்து உதவிடுமாறு, உமது நாமங்கள் என்னும் இராஜ்யத்தினைப் பக்தியுடன் வலம் வருகின்ற அவரது நாமத்தின் பேரில் உம்மை வேண்டிக் கொள்கின்றேன்; அதனால், உமது மண்ணில் வாழும் அனைவரின் ஆன்மாக்களையும் உமது வெளிப்பாட்டின் பேருவகை நிரப்பக் கூடும்.
என் பிரபுவே, உமது அருள் என்னும் ஜீவ நீரினால் அவர்களை நீர் வழிநடத்திச் சென்றுள்ளதால் உம்மிடமிருந்து அவர்கள் ஒதுக்கப்படாமலிருக்க உமது வள்ளன்மையின் வழியாக அவர்களுக்கு அருள்புரிவீராக; உமது அரியாசனத்தின் இருப்பிடத்தின்பால் நீர் அவர்களை அழைத்-திருப்பதனால், உமது அன்புக் கருணையினால் அவர்களை உமது முன்னிலையிலிருந்து துரத்திடாதீர். உம்மைத் தவிர மற்றெல்லாவற்றில் இருந்தும் முற்றாகப் பற்றறுக்கச் செய்திடும் அதனை அவர்கள்பால் அனுப்பி அவர்களை உமது அண்மை என்னும் மண்டலத்தில் சிறகடித்துப் பறந்திடச் செய்வீராக. அதனால் கொடுமை-யாளனின் ஏற்றமோ, அதி மாட்சிமையுடையவரும் அதி வலிமை வாய்ந்தவருமான உம்மை நம்பாதார்களின் தூண்டுதல்களோ அவர்களை உம்மிடமிருந்து தடுக்காதிருக்குமாக.
- Bahá'u'lláh