Return to BahaiPrayers.net
Facebook
அவதாரங்கள் அனைவரையும் படைத்த-வராகிய, மூலங்களுக்கெல்லாம் மூலமாகிய, வெளிப்பாடுகள் அனைத்திற்கும் பிறப்பிடமாகிய, ஒளிகளுக்கெல்லாம் ஊற்றாகிய இறைவா! உமது நாமத்தின் பேரில் புரிந்துகொள்ளல் எனும் விண்ணுலகம், அழகுபடுத் தப்பட்டுள்ளது என்பதற்கும், வெளியிடுகை எனும் சமுத்திரம் பொங்கியெழுந்தது என்பதற்கும் உமது அருளின் பரிமாறல் எல்லாச்சமயங்களைப் பின்பற்று- வோருக்கும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கும் நான் சாட்சியம் கூறுகின்றேன்.
உம்மையன்றி மற்றெல்லாரையும் துறந்திடும் அளவிற்கு என்னை வளம்பெறச் செய்யுமாறும் உம்மைத் தவிர மற்றனைத்திலிருந்தும் என்னைச் சுதந்திரமடையச் செய்யுமாறும், உம்மை வேண்டிக்கொள்கின்றேன். ஆகவே, உமது வள்ளன்மை என்னும் மேகங்களிலிருந்து, உமது உலகங்கள் ஒவ்வொன்றிலும் எனக்கு நன்மை அளிக்கக் கூடியதனை என்மீது பொழியச் செய்வீராக. அதனால் உமது சக்தியளித்திடும் அருள் மூலம் உமது ஊழியர்களின் மத்தியில் உமது சமயத்திற்குச் சேவை செய்ய எனக்கு உதவுவீராக; அதனால், உமது சொந்த இராஜ்யம் நீடிக்கும் வரையிலும், உமது அரசு நிலைத்திருக்கும் வரையிலும் வானுலகின்பால் முழுமையாகத் திரும்பியுள்ளவன்தான் இந்த உமது ஊழியன். உமது மாட்சிமை, உமது புகழ், உமது வள்ளன்மை, உமது அருள் ஆகியவற்றிற்கேற்ப என்னை நடத்திடுவீராக.
உண்மையாகவே, நீரே, வலிமையும் சக்தியும் வாய்ந்த இறைவன், உம்மை வழிபடுவோருக்குப் பதிலளிக்கும் தகுதியுடையவர் நீரே. எல்லாம் அறிந்தவரும் சர்வ விவேகியுமான இறைவன் உம்மையன்றி வேறிலர்.
- Bahá'u'lláh