Return to BahaiPrayers.net
Facebook
கூறுவீராக, பிரபுவே எனதாண்டவரே உந்தன் நாமம் மிகைப்படுத்தப்படுமாக! மனுக்குலத்தின் மத்தியில், தெய்வீகத் திருமொழியின் சொர்க்கங்கள் இயங்கச்செய்திட்ட வேளையில், விவேகம் எனும் ஒளியின் ஜோதி பிரகாசமாக ஒளிவீசிடச் செய்த, அந்த உமது நாமம் மூலமாக, உந்தன் விண்ணுலக உறுதிப்பாடுகளைக் கொண்டு எனக்கு அருள்கூர்ந்து உதவிடவும், உமது ஊழியர்கள் மத்தியில் உந்தன் திருநாமத்தைப் புகழ்ந்திடவும், என்னை இயலச் செய்யுமாறு நான் உம்மை இறைஞ்சுகிறேன்.
பிரபுவே! உம்மைத் தவிர மற்றனைத்திலிருந்தும் பற்றறுத்தும், உமது எண்ணற்ற ஆசிகள் எனும் அங்கியின் நுனியை இறுகப் பற்றிக்கொண்டும், உந்தன்பால் எனது முகத்தை நான் திருப்பியுள்ளேன். ஆதலால், மனிதர்களின் மனங்களைக் கவரக்கூடியவற்றையும், அவர்களின் ஆன்மாக்-களையும் ஆவிகளையும் மகிழ்வுறச் செய்யக்-கூடியவற்றையும் பிரகடனம் செய்திட, எனது நாவினை அசையச் செய்வீராக.
உமது உயிரினங்கள் மத்தியில், கொடுமைக்-காரர்களின் மேலாதிக்கத்தினால் நான் தடை-செய்யப்படாதிருக்கும் விதத்திலும், உமது இராஜ்யத்தில் வசிப்போரின் மத்தியிலுள்ள நம்பிக்கையற்றோரின் தாக்குதல்களினால் தடுக்கப்படாதிருக்கும் விதத்திலும், உமது சமயத்தில் என்னைப் பலப்படுத்துவீராக; உமது நாடுகள்தோறும் என்னை ஓர் ஒளிவீசும் விளக்காக ஆக்கிடுவீராக; அதனால், எவர்களது இதயங்களுள் உந்தன் அறிவொளி ஒளிர்கின்றதோ; உமது அன்புக்கான ஏக்கம் வாசம் செய்கின்றதோ, அவர்களெல்லாரும் அதன் பிரகாசத்தினால் வழிகாட்டப்படக்கூடுமாக.
மெய்யாகவே, நீர் விரும்பியவாறு செய்வதற்குச் சக்திப்படைத்தவர் நீரே; படைப்பெனும் இராஜ்யத்தை நீர் உமது பிடிக்குள் வைத்துள்ளீர். அதி வல்லவரும், சர்வ விவேகியுமான கடவுள், உம்மைத் தவிர வேறிலர்.
- Bahá'u'lláh