Return to BahaiPrayers.net
Facebook
இறைவா, உமது நல்விருப்பத்தினை அடைவதையும், உந்தன்பால் சேவகம் புரிவதில் உறுதிப்படுத்தப்படுவதையும், உமது பணியில் என்னை அர்ப்பணித்துக் கொள்வதையும், உமது உயரிய திராட்சைத் தோட்டத்தில் உழைத்திடுவதையும், சகலத்தையும் உமது பாதையில் தியாகம் செய்வதையும் தவிர வேறெந்த ஆவலையும் என் உள்ளத்தில் நான் கொண்டிருக்கவில்லை என்பதனை நீர் அறிந்துமிருக்கின்றீர்; எனது சாட்சியுமாய் இருக்கின்றீர். சர்வ ஞானியும் சகலத்தையும் கண்ணுறுபவரும் நீரே. உந்தன்பால் எனது அன்பினால், மலைகளையும், பாலை-வனங்களையும் நோக்கி என் அடிச்சுவடுகளைத் திருப்புவதையும், உமது இராஜ்யத்தின் வருகையினை உரக்கப் பிரகடனப்படுத்துவதையும், எல்லா மனிதர்களின் மத்தியிலும் உமது அழைப்பினை எழுப்பிடுவதையுமன்றி வேறெந்த விருப்பமும் எனக்கில்லை. இறைவா! இந்த ஆதரவற்றோனுக்கு வழியினைத் திறந்திடுவீராக; இப்பிணியுற்றோனுக்குப் பரிகாரமளிப்பீராக; இத்துன்புற்றோனுக்கு உமது குணப்படுத்துதலை வழங்கிடுவீராக. தகிக்கும் உள்ளத்துடனும் கலங்கிய கண்களுடனும் உமது திருவாயிலில் நான் உம்மைக் கெஞ் சிக் கேட்கிறேன்.
இறைவா! உமது பாதையில் எவ்விதக் கடும் பரீட்சையையும் சகித்துக்கொள்ள நான் சித்தமாய் இருக்கின்றேன்; துன்பம் எதனையும் மனமாரவும் ஆத்மார்த்தமாகவும் எதிர்கொண்டிட நான் அவாவுருகின்றேன்.
இறைவா! சோதனைகளிலிருந்து என்னைக் காத்திடுவீராக. நான் யாவற்றிலிருந்தும் அப்பால் திரும்பியிருப்பதையும், எல்லாச் சிந்தனை- களிலுமிருந்தும் என்னை நான் விடுவித்துக் கொண்டுள்ளதையும் நீர் நன்கு அறிவீர். உமது நாமத்தைக் கூறுவதைத் தவிர எனக்கு வேறெந்தப் பணியும் இல்லை; உமக்கு ஊழியம் செய்வதைத் தவிர எனக்கு வேறெந்த இலட்சியமும் இல்லை.
- `Abdu'l-Bahá