Return to BahaiPrayers.net
Facebook
தெற்கு மாநிலங்களிலுள்ள பஹாய்களுக்காக வெளிப்படுத்தப்பட்டது
இந்த நாடுகளிலுள்ள நகரங்கள், கிராமங்கள் மற்றும் சிற்றூர்களின் வழி பயணம் செய்து, இறைவனின் நறுமணங்களைப் பரப்புவதில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வோர் ஆன்மாவும் இந்தப் பிரார்த்தனையை ஒவ்வொரு காலையிலும் வாசித்திட வேண்டும்.
என் கடவுளே! என் கடவுளே! என் எளிமையிலும் வலிமையின்மையிலும், அதி பெரும் பணியாகிய, உமது திருமொழியை மக்களிடத்தில் உயர்த்துவதில் உறுதியாகவும், உமது போதனைகளை உமது மக்களிடையே பரப்புவதிலும் நான் ஈடுபட்டிருப்பதை நீர் காண்கின்றீர்.
பரிசுத்த ஆவியின் சுவாசத்தைக் கொண்டு நீர் எமக்கு உதவாவிடில், உமது புகழ்வாய்ந்த இராஜ்யத்தின் சேனைகளைக் கொண்டு எனக்கு உதவாவிடில், தன்னிச்சையாக ஒரு கொசுவைக் கழுகாக மாற்றக் கூடிய, ஒரு துளி நீரை அருவிகளாகவும் கடல்களாகவும் மாற்றவல்ல, ஓர் அணுவை ஒளிகளாகவும் சூரியன்களாகவும் மாற்றவல்ல உந்தன் உறுதிப்பாடுகளை என் மீது பொழியாவிடில் நான் எவ்வாறு வெற்றிபெற இயலும்? என் பிரபுவே! உந்தன் வெற்றிகரமான, திறன்பாடும் மிக்க வல்லமையைக் கொண்டு எனக்கு உதவிடுவீராக; அதனால் உந்தன் புகழையும் நற்பண்புகளையும் எல்லா மக்களிடையே எனது நா உச்சரித்திடக் கூடும், மேலும் உந்தன் அன்பு மற்றும் அறிவு எனும் மதுரசத்தினால் என் ஆன்மா பொங்கி வழிந்திடக்கூடும்.
சர்வ வல்லமை பொருந்தியவரும், நீர் விரும்பிய யாவற்றையும் செயல்படுத்துகின்றவரும் நீரே ஆவீர்.
- `Abdu'l-Bahá