Return to BahaiPrayers.net
Facebook
மத்திய மாநிலங்களிலுள்ள பஹாய்களுக்காகவெளிப்படுத்தப்பட்டது
இறைவனின் நறுமணங்களைப் பரப்புவோர் ஒவ்வொரு காளை வேளையிலும் இப்பிரார்த்தனையை வாசிக்கட்டுமாக.
என் பிரபுவே, எனதாண்டவரே! உமது இராஜ்யத்தின் பெருஞ்சாலையை நோக்கி என்னை வழிநடத்தியதற்கும், இந்த நேரான, நீன்ட பாதையில் என்னை நடக்கச் செய்ததற்கும், உமது ஒளியின் பிரகாசங்களைக் கண்ணுறுவதற்காக என் கண்களைத் தூய்மைப்படுத்தியற்கும், இரகசியங்கள் இராஜ்யத்திலிருந்து தோன்றும் புனிதத் தன்மை என்னும் பறவைகளின் கீதங்களுக்கு என்னைச் செவிசாய்த்திட வைத்ததற்காகவும், நேர்மைமிக்கோரின் மத்தியில் உமது அன்பின்பால் என் இதயத்தை ஈர்க்கச் செய்தமைக்கும் புகழும் நன்றியும் உம்மைச் சார்ந்திடுமாக.
பிரபுவே, பரிசுத்த ஆவியினைக் கொண்டு என்னை உறுதிப்படுத்துவீராக, அதனால் நான் எல்லா நாடுகளிடையிலும் உமது நாமத்தைதின் பேரில் அறைகூவலிட இயலும், மற்றும் உமது இராஜ்யம் தோன்றியுள்ளது என்னும் நற்செய்திகளை மனித இனத்தினிடையே வழங்கிட இயலும்.
பிரபுவே! நான் வலுவற்றிருக்கின்றேன், உமது சக்தியையும் வலிமையையும் கொண்டு என்னைப் பலப்படுத்துவீராக. எனது நா தடுமாறுகின்றது, உம்மைப் போற்றவும் புகழவும் எனக்கு ஆற்றலளிப்பீராக. நான் தாழ்ந்தவன், உமது இராஜ்யத்தினுள் நுழைந்திடச் செய்வதன் மூலம் எனக்கு மதிப்பளிப்பீராக. நான் தூர விலகியுள்ளேன், என்னை உமது கருணை என்னும் வாசலை அடையச் செய்வீராக.
பிரபுவே! என்னை ஒரு பிரகாசமான ஒளிவிளக்காகவும், ஒளிவீசும் ஒரு விண்மீனாகவும், கனிகள் நிறைந்ததும், எல்லாப் பகுதிகளுக்கும் நிழல்தரும் கிளைகளைக் கொண்டுள்ளதுமான ஒரு புனித விருட்சமாக்குவீராக. மெய்யாகவே, வல்லமை பொருந்தியவரும், சக்திவாய்ந்தவரும், கட்டுப்படுத்தவியலாதவரும் நீரே ஆவீர்.
- `Abdu'l-Bahá