Return to BahaiPrayers.net
Facebook
மேற்குமாநிலங்களிலுள்ள பஹாய்களுக்காக வெளிப்படுத்தப்பட்டது
பின்வரும் பிரார்த்தனை ஒவ்வொரு நாளும் வாசிக்கப்பட வேண்டும்:
கடவுளே, கடவுளே, இது ஒரு சிறகொடிந்த பறவை; அவன் பறக்கும் வேகம் மிக மெதுவாக உள்ளது — அவனுக்கு உதவிடுவீராக, அதனால் அவன் வளம், விமோசனம் என்னும் சிகரத்தை நோக்கிப் பறக்கவும், உமது எல்லையற்ற பரவெளியில் அதிமிகு மகிழ்ச்சியுடனும் உவகையுடனும் சிறகடித்து உயரவும், உமது அதி உயரிய நாமத்தினால் தனது இன்னிசையினை எல்லாப் பகுதிகளிலும் எழுப்பவும் உதவி புரிவீராக. இவ்வழைப்பால் செவிகளை மகிழ்வுறச் செய்து, வழிகாட்டுதல் என்னும் அடையாளங்களைக் கண்ணுறுவதன்வழி கண்களை ஒளிபெறச் செய்வீராக.
பிரபுவே! நான் ஒருவனாகவும் தனியனாகவும், தாழ்ந்தவனாகவும் இருக்கிறேன். எனக்கு, உம்மையல்லாது ஆதரவு வேறில்லை, உம்மைத் தவிர உதவுபவர் எவருமிலர், உம்மையல்லாது பேணி வளர்ப்பவர் யாருமிலர். உந்தன் சேவையில் என்னை உறுதிப்படுத்துவீராக, உமது தேவதூதர் படையினைக் கொண்டு எனக்கு உதவி புரிவீராக, உமது போதனைகளைப் பரப்புவதில் என்னை வெற்றி பெறச்செய்து, உமது உயிரினங்கள் மத்தியில் என்னை உமது விவேகத்தினைத் துணிவுடன் எடுத்துரைத்திட அனுமதிப்பீராக. மெய்யாகவே, நீரே நலிந்தோரின் உதவியாளரும் வலுக்குறைந்தோரின் பாதுகாப்பாளரும் ஆவீர், மெய்யாகவே, நீரே ஆற்றல் மிக்கவர், வல்லவர், நிபந்தனைக்குட்படாதவர்.
- `Abdu'l-Bahá