Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே, நான் வணங்கி நேசிப்பவரே! உமது ஒற்றுமைக்கும், உமது ஒருமைக்கும் நான் சாட்சியம் அளித்து, கடந்த காலத்திலும், நிகழ் காலத்திலும் நீர் வழங்கிய பரிசுகளுக்காக நன்றி நவில்கின்றேன். நீரே சர்வ வள்ளன்மைமிக்கவர்; நிரம்பி வழிந்திடும் உமது கருணை மழை, உயர்ந்தோர், தாழ்ந்தோர் ஆகியோரின் மீது சரிசமமாகவே பொழிந்துள்ளது; உமது கிருபையின் பிரகாசங்கள், கீழ்ப்படிந்திடுவோர், கீழ்ப்படிந்திடாதோர் ஆகிய இருதரப்பினர் மீதும் பொழியப்பட்டுள்ளன.
கருணைக் கடவுளே, எவரது கதவின் முன் கருணையின் சாராம்சம் சிரந்தாழ்த்தியுள்ளதோ, எவரது சமயத்தின் சரணாலயத்தைச் சுற்றி, அன்புக் கருணையானது, அதன் உள்ளார்ந்த ஆற்றலில், வலம் வந்துள்ளதோ, அதன் பேரில், உமது தொன்மை கிருபையை இறைஞ்சி, உமது நிகழ்கால தயவை நாடி, நாங்கள் உம்மிடம் மன்றாடுகின்றோம்; ஆதலால், உயிர்ப்்பொருள் உலகின் அவதாரங்க-ளானவர் அனைவரின் மீதும் கருணைக்காட்டி, உமது நாள்களில் உமது கிருபையின் பொழிவுகளை அவர்களுக்குத் தந்திட மறுத்திடாதீர்.
அனைவரும் ஏழைகளாகவும் வறியோராகவும் இருக்கின்றோம்; மெய்யாகவே, நீரே சகலமும் கொண்டுள்ளவர், சகலத்தையும் அடிபணியச் செய்பவர், சர்வ சக்திமிக்கவர்.
- Bahá'u'lláh