Return to BahaiPrayers.net
Facebook
இரக்கமுள்ள பிரபுவே, தாராளமும் செயல்திறனும் கொண்டவரே! உமது ஆதரவின் கீழ் பாதுகாப்பைப் பெற்றிருக்கின்ற உமது ஊழியர்கள் நாங்களே. எங்கள் மீது உமது தயை எனும் பார்வையைச் செலுத்திடுவீராக. எங்கள் கண்களுக்கு ஒளியையும், எங்கள் காதுகளுக்குச் செவிமடுத்திடும் சக்தியையும், எங்கள் இதயங்களுக்குப் புரிந்துகொள்ளலையும், அன்பையும் வழங்கிடுவீராக. உமது நற்செய்திகளின் வாயிலாக எங்கள் ஆன்மாக்கள் களிப்படையவும், மகிழ்ச்சி பெற்றிடவும் செய்திடுவீராக. பிரபுவே! உமது இராஜ்யத்தை நோக்கிச் செல்லும் பாதையை எங்களுக்குக் காட்டிடுவீராக; பரிசுத்த ஆவியின் சுவாசங்களைக் கொண்டு எங்கள் அனைவரையும் மீண்டும் உயிர்பெறச் செய்திடுவீராக. எங்களுக்கு நித்திய வாழ்வை வழங்கி, எங்கள் மீது என்றும் முடிவில்லாப் புகழைத் தந்தருள்வீராக. மனுக்குலத்தை ஒன்றுசேர்த்து, மனித உலகை ஒளிபெறச் செய்திடுவீராக. நாங்கள் அனைவரும் உமது பாதையைப் பின்பற்றி, உமது நல்விருப்பத்திற்காக ஏங்கி, உமது இராஜ்யத்தின் மர்மங்களை நாடிடவும் கூடும். கடவுளே! எங்களை ஒன்றுபடுத்தி, உமது பிரிக்கமுடியாத பந்தத்தைக் கொண்டு, எங்கள் இதயங்களை இணைத்திடுவீராக. மெய்யாகவே, நீரே வழங்குபவர், நீரே இரக்கமுடையவர், நீரே வல்லவர்.
- `Abdu'l-Bahá